பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 25 தலைவர். அவர் திருத்தொண்டர்களிடத்தில் இடையரு அன்பும் பக்தியும் கொண்டவர். ஆகவே, அவர்களையே சேக் கிழாராம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று காப்புப் பருவத்தில் அமைத்துக் கொண்டனர். அங்கனம் அமைந்த முறையில் சுந்தரர் பாடியுள்ள திருத் தொண்டத் தொகை யில் உள்ள ஒவ்வொரு பாடலேயும் தலைப்பாக வைத்து, அப் பாடலில் குறிக்கப்பட்ட அடியார்களைச் சேக்கிழாராம் குழந் தையைக் காக்க என்று வேண்டுவாராயினர். இதனை இக் காப்புப் பருவம் முற்றிலும் காணலாம். திரு பிள்ளை அவ்ர்கள், திருவாவடுதுறை பூரீ அ பல வாண தேசிகர்மீது பாடிய பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத் திலும், பொது முறைப்படி காப்புக் கூருமல், அகச் சந் தானம் புறச் சந்தானம் முதலான சைவ சித்தாந்தக் குரவர் பெருமக்களைக் காப்பாகப் பாடியுள்ளமையினையும் ஈண்டு நினைவு கூர்க. ஆகவே, பிள்ளைத் தமிழில் ஒரு புது முறைக் காப்புப் பருவம் பாடிய பெருமையினுல் போலும், திரு பிள்ளை அவர்களைப் பிள்ளைத் தமிழ் மீனுட்சி சுந்தரம்பிள்ளை என்று அழைத்தனர். இவரே பொதுமுறையினைக் கையாண்டு காப்புப் பருவம் பாடிய பிள்ளேத் தமிழ் நூல்கள் பல உள. பெரிய புராணம் என்பது பெருவழக்காயினும், திருத் தொண்டர் புராணம் என்பதே இந்நூலுக்கு உரிய பெய ராகும். இதனைச் சேக்கிழாரே, இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னுள் தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற பொங்கிய இருளே ஏனைப் புறஇருள் போக்கு கின்ற செங்கதி ரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என் பாம் என்று குறிப்பிட்டுள்ளனர். திருத்தொண்டர் புராண வரலாற்றிலும் உமாபதி சிவம்,