பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்புகழ் வாழ்த்துரைகள் திருக்கயிலாய பரம்பரைப் பொம்மைய பாளையம் பெரியமடம், திருமயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத் தர்மகர்த்தத்துவம் பதினெட்டாம் பட்டம் புரீலரு சிவஞான பாலய சுவாமிகள் பூரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருவடி வாழ்க. "எங்கும் நிறைந்த சிவபெருமான் குரு வடிவிலும் இலிங்க வடிவிலும் அடியார் வடிவிலும் வெளிப்படுவார்; அம்மூன்று வடிவங்களையும் கடவுளாகவே கொண்டு வழி பட்டால் முத்திப்பேறு அடையலாம்' என்பது சாத்திரம், அம்மூன்று வடிவங்களையும் தனித் தனிப் பற்றுக் கோடாகக் கொண்டு வழிபட்டு முத்தியடைந்தவர்கள் சைவ நாயன் மார்களாவர். அந்நாயன்மார்களை வழிபட்டு அவர்களின் வரலாறுகளைப் பெரிய புராணம்’ என்ற நூல் வாயிலாக உலகுக்கறிவித்து முத்தியடைந்தவர் பூர் சேக்கிழார் பெருமானுவார். இன்று சைவம் நிலைத்திருக்கிறது என்ருல் அஃது அப்பெருமானராலேயாம். எங்கள் பூரீல பூர் சிவஞான பாலய சுவாமிகளைப்பற்றி பூரீ சிவப்பிரகாச சுவாமிகள், சொல்லும்போது, 'அருந்தமிழ் நாடு ஒரு கோடி தவம் செய வந்து அதிர் வெள்ளருவி துரங்கு உயர் மயிலை வரையின் அமர் விளக்கு’ என்ருர். அப்படியே நாம், "மேன்மை கொள் சைவம் செய்த தவப் பயனுகச் சேக்கிழார் அவதரித் தார்' என்னலாம். பூரீ சேக்கிழாரைப்பற்றி முழுதும் உணர்ந்தவர் திருவா வடுதுறை யாதீன மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள். அப்பெருமானின் பெருமைகளெல்லாம் உல குக்குத் தெரியும்படி சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத் தமிழ்' எனும் நூலைப் பாடினர்கள். பிள்ளையவர்கள் தம் புலமை நல்ம் முழுமையும் காட்டிப் பாடிய அந்நூலின் பொருளைப் புலமையுடையோரே அறிய முடியும். அதனால் அந்நூலுக்கு உரை வருவது வேண்டுவதே. அப்பணியினைச் செந்தமிழ்ச் செல்வரும், சைவ சமய சிரோமணியும் பேராசிரியருமான வித்துவான், பாலூர்-கண்ணப்ப முதலியார் எம்.ஏ.,