பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 27 என்ற பாடலிலும், திருஞானசம்பந்தர்பற்றிய புராணத்தில், சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணிற்ருெளி போற்றிநின் ருதி யார்.அருள் ஆதலின் அஞ்செழுத்து ஒதி ஏறினர் உய்ய உலகெலாம் என்று புராணத்தின் இடையில் பொருத்தப் பட்டிருத் தலையும், என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளார்.அடி யார்.அவர் வான் புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம் என்று புராணத்தின் ஈற்றுப் பாடலிலும் பொருந்தி இருத் தலைக் காண்க. இவற்றின் குறிப்பே 'உலகெலாம் எனும் சுருதி நாப்பண்ணும் ஈற்றும் பொருத்தி’ என்னும் தொடரில் காணப்படுவது. சைவ பரிபாஷை என்பது சைவ சமையிகட் குள்ளேயே அறிதற்குரிய சொல்லும் பொருளும் ஆகும். சேக்கிழார் இத்தகைய சைவ பரிபாஷைகளை ஆளவல்லவர் என்பது, கோட்புலி நாயனர் புராணத்து அவர், திருவிரையாக் கலி என்று குறிப்பிட்டிருத்தல் கொண்டு தெளியலாம். தந்தமர்கள் ஆயிஞர் தமக்கெல்லாம் தனித்தனியே எந்தையார்க் கமுதுபடிக் கேற்றியநெல் இவையழிக்கச் சிந்தை ஆற் ரு நினைவார் திருவிரையாக் கலிஎன்று வந்தனையால் உரைத்தகன் ருர்மன்னவன்மாற்ரு, னயில் என்ற அப்புராணப்பாடவில் காண்க. ஈண்டுத் திரு. "யாக் கலி என்பது, சிவபெருாமானைக் குறித்துச் சொல், தார் ஆணை எனப் பொருள்படும். இது சைவப் பெருமக்க க்கே அன்றி, வேறு யாவரும் அறிதற்கு இயலாதது. சேக்கிழார் சம்பிரதாய முறைகளை நன்கு உணர்ந்தவர். இதனே இவரது புராணத்துள் பல இடங்களில் காணலாம். திண்ணணுர் கன்னிவேட்டைக்குப் போகுமுன், தேவராட்டித்