பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 39 ஏழு புரவி என்பது சூரியனது குதிரை யாகிய 'சப்தா' என்னும் பெயருடைய குதிரை ஆகும். முன்னேய ஏழு என்பது ஏழு என்பதையும், பின்னைய ஏழு என்பது எழுகின்ற என்னும் பொருளையும் தருதல் காண்க. எறிபத்தநாயனர் தம் கையில் மழு வேந்திச் சிவனடியார் கட்குத் தீங்கு செய்வார் எவராயினும் அவரை வெட்டும் வீர தீரமுடையவர். ஆதலின் அவரை 'மலேமலிபுயத்தர்' என் றனர். திரண்டு உருண்டு பருத்த தோளுக்கு மலே உவமை. எறிபத்தர் முதல் எழுவோர் ஆவோர், எறிபத்தர், ஏளுதி நாதர், கண்ணப்பர், குங்கிலியக்கலயர், மானக்கஞ்சாறர், அரிவாள்தாயர், ஆளுயர். எறிபத்தர், கருவூர் ஆன்நிலையில் உள்ள சிவபெருமான வழிபட்டவர். கையில் மழு உடையவர். சிவனடியார்கட்குத் தீங்கு இழைப்பவர்களே அதுகொண்டு வெட்டி வீழ்த்துபவர். ஒருமுறை திருக்கோயிலுக்கு மாலை கொண்டு சென்ற சிவகாமி ஆண்டார் என்பவரை அரச யானே தள்ளி, மலரையும் மிதித் தது. அது கண்ட எறிபத்தர் அதனைத் தம் மழுவால் வெட் டினர். அரசன் இவர் அருகில் வந்து விசாரித்தபோது, தாம் யானேயை வெட்டியதன் காரணம் கூறச் சோழ மன்னன், ஆனையின் குற்றத்திற்குக் காரணன் நானே என்று தன்னை யும் கொன்றுவிட வேண்ட, அவனது அன்பை அறிந்த நாயனர் தம்மையே மாய்த்துக்கொள்ள முயன்ருர். அரசன் தடுத்தான்; ஆண்டவன் இருவர்க்கும் திருவருள் புரிந்தான். ஏளுதிநாதர் சோழ நாட்டின் எயினனுாரில் ஈழகுலச் சான்ருேர் ஆவர். திருநீறு இட்டாரைப் போற்றுபவ்ர் அரசர்க்கு வாள் வித்தை பயிற்றுவது அவர் தம் தொழில். அதனுல் பெரும் பொருளைப் பெற்றுச் சிவனடியார்க்கு ஈந்தவர். அதீசூரன் என்பவன் ஒரு படை வீரன். நாயனர் மீது பொருமை கொண்டு வாட்போர் தொடுத்தான். ஆளுல், தோற்முன். என்ருலும், நாயனரை வஞ்சனேயால் வெல்லத் திருநீறு அணிந்த நெற்றியை, மறைத்துப் போரிட்டான். போர்க்களத்தில் மெல்ல திருநீற்றுப் பொலிவுடன் திகழ்ந் தான். அத் தோற்றத்தைக் கண்ட நாயர்ை தயங்கிய