பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 41 திருப்பனந்தாள் சிவலிங்கம் சாய்ந்து இருந்தபோது அதனே நிமிர்த்த, யானே கட்டி முயன்றபோது அது நிமிரா நிலையில் கலயர் சென்று கயிற்றைத் தம் கழுத்தில் பூட்டி இழுத்தபோது சிவலிங்கம் நிமிர்ந்தது. மானக்கஞ் சாற நாயனர் கஞ்சாறு ஊரினர்; வேளாளர். சிவபெருமான் மாவிரதர்தம் கோலத்தோடு வந்து நாயனர் மகள் கூந்தலைக் கேட்டனர். அப்படியே அம்மகளார் கூந்தலே அறுத்துக் கொடுத்தவர். இறைவர் அவர்க்குத் திருவருள் புரிந்து மறைந்தார். கூந்தலும் வளர்ந்து விட்டது. அரிவாள் தாயர் என்பவர் சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் ஊரினர்; வேளாளர். இவரது பெயர் தாயர் என்பது. மாவடு, செங்கீரை, செந்நெல் அரிசி இவற்றைச் சிவபெருமானுக்கு அமுது செய்து வந்தவர். வறுமையுற்ற நிலையிலும் இத் தொண்டை நிறுத்தாது செய்து வந்தார். ஒரு நாள் சிவனுர்க்குரிய அமுதுப் பொருள்களை எடுத்துச் சென்றபோது உணவு இன்றி இளைத்த காரணத்தால் இடறிக் கீழே விழ, அங்கிருந்த வெடிப்பில் அரிசி, கீரை, மாவடு சிந்திப் போயின. உடனே அடியார் தம் கழுத்துக் குரல்வளையை அறுத்துக்கொள்ள முயன்ருர். இறைவர் அவர்தம் அமுதை ஏற்ருற்போல் மாவடுவ்ை விடேல் விடேல் என்று கடித்து ஓசை காட்டி ஊட்டியை அறுக் கொன்ணுவாறு செய்து அருள் புரிந்தார். ஆளுயர் மழ நாட்டில் திருமங்கலம் என்னும் பதியில் இடையர் குடும்பத்தில் தோன்றிஞர். ஆடு மாடுகளைக் காட் டகம்அழைத்துச் சென்று, புல் ஆர்த்திப் புனல் ஊட்டி வந் தார். ஒய்ந்த நேரங்களில் புல்லாங் குழலில் ஐந்தெழுத்தை இசைத்து இறைவரை உருகுமாறு செய்தார். இறைவர் இவர் முன் தோன்றித் திருவருள் புரிந்தார். எழுபவம் தேவர், மக்கள், விலங்கு, பறவை, நீர் வாழ்வன, ஊர்வன, தாவரம் என்பன. அடியார்கட்கு எப் பிறவியும் இல்லை ஆதலின், எழுபவம் மாய்த் த எழுவர்'