பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 49 முயன்ருர். அதுபோது அக்கல்லிலிருந்து ஒரு கைதோன்றி அவரை மொத்துண்ணுவாறு செய்தது. இதற்கிடையில் இறைவரும் காட்சிதந்து திருவருள் புரிந்தார், சண்டேசுவரர் சோழ நாட்டுச் திருச்சேய்ஞ்ஞலூரில் வேதியர் மரபில் தோன்றினர். இவரது தந்தை எச்சதத்தன் என்பவன். நாயனரது இயற்பெயர் விசார சருமர் என்பது. அவ்வூரில் பசுக்களை மேய்க்கும் இடையன், பசுக்களே அடிப்பதைக் கண்டு, தாமே அவற்றை நன்முறையில் மேய்க்கலாயினர். விசாரசருமர் மண்ணியாற்றங்கரையில் ப. சு க் க ளே மேய்த்து நீர்பருகச் செய்து வந்தார். இவர் அவ்வாற்றங் கரையில் ஆத்தி மரத்தடியில் மண்ணுல் சிவலிங்கம் அமைத் துப் பசுக்கள் தாமாகச் சொரிந்த பாலே அபிஷேகம் செய்து, சிவபூசை பண்ணிவந்தனர். இதனே ஒருவன் திருச்சேய்ஞ்ஞ லுாரார்க்கு அறிவித்தனன். தந்தை எச்சதத்தன் நேரேவந்து கண்டபோது, வெகுண்டு பூசைக்கு அமைந்த பாற்குடத் தைக் காலால் உதைத்தான். விசாரசருமர், சிவபூசைக்குத் தீங் கிழைத்த தந்தையின்காலைப் பக்கத்தில் இருந்த கழிகொண்டு வெட்ட, அது மழுவாக மாறி இருதுண்டாக்கியது. இறைவர், விசாரசர்மர் சிவபூசையினிடத்துக் கொண்ட பற்றைக் கண்டு காட்சி அளித்து, இனி உனக்கு யாமே தந்தை. மேலும், உனக்குச் சண்டேசுர பதமும் தந்தோம்’ என்று அருளிக் கொன்றை மாலையைத் தலையில் சூட்டி மறைந்தார் அன்று முதல் சண்டேசுவரர் எனப்பட்டார். இக்காட்சியைச் சிற்ப வடிவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றும் காண { | LÜ. 'ஒண்பொருள்' என்பது ஈண்டுப் புத்திரர் என்னும் பொருளது. அப்புத்திரர் திருஞான சம்பந்தர். அவர் சிவ பாத இருதயர் திருமகளுர். திருஞானசம்பந்தர் நம் மனுேர்க் குத் திருவருள் பாலித்தவர். சம்பந்தர் காலத்தில் சைவம் குன் ரிச் சமனம் ஓங்கி இருந்தது. அதன்பொருட்டுச் சிவபாத இரு தயர் துன்புற்று இறைவரை வேண்டிப்பரசமயத்தை ஒழிக் கும் புதல்வர் பேற்றை விரும்பினர். இதனைச் சேக்கிழார். 乐