பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரைகள் திரு. மா.சே. சாரங்கபாணி முதலியார் பி.ஏ.,பி.எல். அவர்கள் ஆணையர், அறநிலைய ஆட்சித்துறை, சென்னே. திமிழிலுள்ள பலவகைச் சிற்றிலக்கிய நூல்களுள் பிள்னைத்தமிழ் என்பதும் ஒன்று. பிள்ளைத் தமிழ் நூல்கள் தமிழில் மிகப் பல இருப்பினும், அவற்றுளெல்லாம் சேக்கி ழார் பிள்ளேத் தமிழ் மிகவும் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களெல்லாம் கடவுளர்மீதோ அரசர்கள்மீதோ, வள்ளல்கள் மீதோ கவிஞர்களால் பாடப் பெற்றனவாக இருக்கும். ஆளுல், சேக்கிழார் பிள்ளை த் தமிழோ, ஒரு பெருங் கவிஞர். மற்ருெரு மாபெருங் கவிஞ ரைப்பற்றிப் பாடிய மாட்சிமை வாய்ந்தது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீட்ைசிசுந்தரம் பிள்ளை அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அண்மைக் காலத்திலே காப்பியம் பாடவல்ல மாபெருங் கவிஞராக விளங்கிய சிறப்பு, அவர் ஒருவர்க்கேயுரியது. கோவை, உலா, அந்தாதி, துாது, கலம்பகம், பிள்ளேத் தமிழ், புராணம் என்னும் பல வகைகளிலும், அப்பெருந்தகையார் பற்பல நூல்களைப் பாடி யருளியிருக்கின்ருர். எனினும், அவற்றுளெல்லாம் தலை சிறந்து, அனைவரும் விரும்பிப் பயிலும் வண்ணம் திகழ்வது, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆகும். மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை ஆதீனப் புலவராய்த் திகழ்ந்து, சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தினைப் பலகாற் கற்றும், பலருக்குக் கற்பித்தும், தம் வாழ்நாள் முழுவதும் சேக் கிழார்பாற் பேரன்பும், பேரீடுபாடும்கொண்டு விளங்கியவர்.