பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 69 (அ. செ.) வம்பருயாப்பு என்பது, திரு தொண்டத் தொகையில் வம்பருவரிவண்டு என்று தொடங்கபெறும் ஐந்தாவது பாடல். பாடல் - பாட்டு நவில் கூறும், வம்பு - பாதர் தம் முலையினே அனைத்துக்கட்டும் கச்சு, அரு நீங்கா, ஒரு ஒப்பற்ற, மடக்கொடியை-இளைய பூங் கொடி போன்ற மாதினே, வேட்டல்-மனத்தல், வண் பிரம சாரியநிலை-வளமான பிரம்மச்சரிய நிலையில், வைகும் நாளேவாழும் நாட்களிலேயே, பாவை-பதுமைபோன்ற ஒரு பெண் குழந்தையை, உம்பல்-யானைமீது, அரிக்குருளே சிங்கக்குட்டி, உவகை-மகிழ்ச்சி, உலா யவர் - இறைவன் உறைவிடங்கள் தோறும் சென்றுலாவியவராம் திருஞான சம்பந்தர், ஐவர்ஐந்து இந்திரிய சேட்டைகளை, அறுவர்-திருஞான சம்பந்தர், கவிக்காமர், திருமூலர், தண்டி அடிகள், மூர்க்கர், சோமாசி மாறர் ஆகிய ஆறுஅடியார்கள், பொன்-அழகிய, ஏத்தெடுப் பாம்-போற்றித் துதிப்போம் அம்பு-நீர், ஆழி-கடல், திரு முனி-அழகிய அகத்திய முனிவர், ஆக்கம்-உயர்வு, அருள் மூவர்-அருளே வடிவாகக்கொண்ட அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் அருள் என்பதற்குத் திருவாய் மலர்ந்தருளிய என்று கூறினும் ஆம். மறை-வேதத்தின், நம்பு-அன்பு, வித்தியாரண்யமுனி வரன்-வேதங்கட்கு விரிவுரை எழுதிய முனிவர், நம்பு - விருப்பம், நயப்.:-விரும்ப, யாப்பு-செய்யுள், அமைப்பு உறபொருந்த, நாவலர் பிரான்-நாவன்மையுடைய தலைவராம் சேக்கிழார், அருண்மொழி நலத்தன்-அருண்மொழித் தேவன் என்னும் பெயரிய நன்மையுடைய சேக்கிழார். (விளக்கம்) கடல் வற்ருத நீரையும் ஆழத்தையும் உடைமையின் வம்புஅரு எனப்பட்டது. இந்திரன்விருத்திரா சூரனைக் கொல்ல முனைந்தபோது, அவன் கடலில் ஒளிந்து கொள்ள, அந்நிலையில் இந்திரன் அகத்தியரை வேண்ட, அவனது வேண்டுகோட்கிணங்கி,அகத்தியர் கடலேஉண்டனர். இக்குறிப்பே ஆழிமுழுதுண்ட திருமுனரி எனப்பட்டது. அகத்தி யர்க்குப் பல சிறப்புக்கள் இருத்தலின், அவர் திருமுனி எனப்பட்டார். தமிழ்மொழி என்றும் உளமொழி, இதனைக் 'கம்பர்,என்றுமுள இன் தமிழ்” என்றனர். இத்தகையதமிழ்ப்