பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 87 மாண்பினர்கள் - பெருமைக்கு உரியவர்கள், சாந்த மங்கை - என்பது சாக்கிய நாயனர் வாழ்ந்த ஊர், ஏர் - அழகு, வை - கூரிய, எய்தாதும் அடைமொழி பொருந்தப் பெருதும், அறுவர் - சாக்கிய நாயனர், சிறுத் தொண்ட நாயனர், சிறப்புலி நாயஞர், கழறிற்றறிவார் நாயனர்: கூற்றுவ நாயனர், கண நாத நாயனர . இறுவரை - சாகும் வரை. (விளக்கம்) சமணர்கள் பெரிதும் கருநிறம் உடைய வர்கள். இதனைத் தேவாரத் திருமறை கொண்டும், பெரிய புராணம் கொண்டும், திருவிளையாடற் புராணம் கொண்டும் மற்றும் பல நூல்களைக் கொண்டும் நன்கு தெளியலாம். 'கரியமனச் சமண்' 'கருகும் உடலார்' 'கரிபோல் திரிந்து' என்று திருமுறைகளில் வருதல் காண்க 'காரிருண்ட குழாம் போலும் உருவுடைய கார் அமணர்' என்று பெரிய புராணத்தும், 'இடி கெழுகார் போல் குன்றின் இழிந்து' என்று திருவிளையாடற் புராணத்தும் வருதல் காண்க. ஆகவே, 'கார் கொண்ட அமனர்' என்று கூறப்பட்டது. அன்றி, கார் கொண்ட என் பதருக்கு இருண்ட அறிவு பொருந்திய என்று கூறினும் அமையும். கார் என்பதற்கு இருண்ட அறிவு என்னும் பொருள் இருத்தலை, களவு என்னும் கார் அறிவு' என்னும் குறட்கு உரை ஆசிரியர்கள் உரைத்த உரையால் தெரியலாம். களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவு” என்று பரிமேலழகரும், 'பொல்லா அறிவுடைமை' என மணக்குட வரும் எழுதி இருத்தல் காண்க. சிந்தாமணி என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருன சீவக சிந்தாமணி ஆகும். இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர். ஐம்பெருங் காப்பியங்கள் என்பன சீவக சிந்தாமணி, சிவப்பதிகாரம் , மணிமேகலை, வளையாபதி குண்டலகேசி என்பன. சீவகசிந்தாமணியில் அதபாய சோழன் பெரிதும் ஈடுபட்டு, அதனைத் தன்சபையில் பிர சங்கம் செய்யு மாறு ஏற்பாடு செய்திருந்தான். இதனைத்