பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காப்புப் பருவம் முனே அரையர், அதிபத்தர், கலிக்கம்பர்-கலியர், சத்தியார், ஐயடிகள் காடவர் கோன் ஆகிய எட்டு அடியார்கள். - விளக்கம்: பிரமன் உயிர்களைப் படைக்கும் தெய்வம். அவன் குறிப்பிட்ட ஒரு சாதியினே மட்டும் படைப்பவன் அல்லன். உலகில் உள்ள எல்லாச் சாதிகளையும் படைப்பவன். இவ்வாறு கருதுபவர் இந்திய நாட்டு மக்கள். புராணங் களின் கருத்தும் இதுவே. இதுவே பல சாதியும் சேரப் படைத்ததேவு எனப்பட்டது. சேக்கிழார் பெருமானரும், தம்முடைய படைப்பாகிய பெரிய புராணத்தில் பல சாதி யில் தோன்றிய பெரியார்களின் வரலாற்றையும் பாடி யுள்ளனர். ஈண்டுப் பிரமனினும் சேக்கிழார் பேர்அறிவு படைத்தவர். பிரமன் பல சாதியினரை மட்டும் படைத் தவன். ஆனல் சேசகிழார் பெருமானுரோ பல சாதியினைப் பற்றிக் கூறுவதோடு இன்றி, அவ்வச் சாதியின் குறி, குணம், செய்கை, குடி, கொள்ளும் இயல்பு, மொழி, உணவு ஆகிய இவற்றை எல்லாம் அறிந்து இயம்பியவர். இதனுல்தான் எல்லாம் அறியவலர் எனப்பட்டார். பிரமனே படைத்த பல சாதியினர் மறைகின்றனர். ஆளுல் சேக்கிழார் படைப் பாகிய பெரிய புராணம் மாயாமல் என்று நிலவி வருகின்றது. இதனுல்தான், குமர குருபர சுவாமிகளும் கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்தமிழோர்க்கொவ்வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு. என்று தெரிந்து கூறினர். சிவனடியார்களேப்பற்றி அறிவிக்கும் நூல்கள் சுந்தர ருடைய் திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திரு வந்தாதி யும் ஆகும். இரு த் தொண்ட த் தொ ைகயின் மூலம் நாம் அறியக் கிடப்பன கீழ்வருவன: திருநீலகண்டர் குபவர் என்பதையும், இயற் பகையார் இல்லையே என்னுத இயல்பினர் என்பதையும்,