பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 105 மாறநாயனர் இளையான் குடியினர் என்பதையும், மெய்ப் பொருள் நாயனர் வெல்லுமா மிகவல்ல பண்பினர், என் பதையும், விறல்மிண்டர் குன்றுாரைச் சார்ந்தவர், என்பதை யும், எறிபத்தர் வேல் ஏந்திய நம்பி என அவரது படையின் சிறப்பையும், (ஏளுதிநாதர்க்கு எந்த அடைமொழியும் காணப்பட்டிலது.) கண்ணப்பர் கலைமலிந்த என்ற கலை அறிவையும், கலய நாயனர் கடவூரினர் என்பதையும், மானக்கஞ்சாறர் தோள் மலிந்த வள்ளல் எனத்தோள் சிறப்பும் கொடைச்சிறப்பும் உடையவ்ர் என்ற குறிப்பையும், தாயனர் எஞ்சாதவாள் என அவர் தம் வாள்சிறப்பை49, ஆளுயர் அலைமலிந்தபுனல் மங்கை என அவர்தம் ஊர்ச் சிறப்பையும், முர்த்திநாயனர் மும்மையால் உலகாண்ட என்ற அவர்தம் வரலாற்றுக்குறிப்பையும், (முருக நாயஇே உருத்திர பசுபதியார் எந்தவித அடைமொழியின்றியும் குறிப்பிடப்பட்டவர்கள்) திருநாளைப் போவார் செம்மையே என்ற அவர் தம் பண்பின் மேன்மையினையும் (திருக்குறிப்புத் தொண்ட நாயனர்க்கு எந்த விதமான அடைமொழியும் இலது.) சண்டேசுரர் தம் தாகையாள் தானே வெட்டிய வரலாற்றுக் குறிப்பையும் திருநாவுக்கரசர் திருகின்ற செம்மையே செம்மையாக் கொண்ட என அவ்ர்தம் பண்பின் மேம்பாட்டையும், குலச்சிறை யார் பெருதம்பி என்ற அடையின் மூலம் ஆடவரில் சிறத்தவர் என்ற குறிப்பையும், (நம்பி என்பது விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர் இப்பெயர் கண்ணப்பர்க்கும் அப்பூதி அடிகளார்க்கும், நமி நந்தி அடிகளார்க்கும், கனம் புல்லர்க்கும், முனேயடுவ்ார்க் கும், இடகழியார்க்கும், கோட்புலி பார்க்கும் கொடுக்கப் பட்டுள்ளதையும் அறிக) பெருமிழலக் குறும்பர் என அவர்தம் ஊரினச் சார்த்தியும், (பேயார்-காரைக்கால் அம்மையார். எந்த அடைமொழியும் இன்றிக் குறிப்பிடப்பட்டவர்) அப்பூதியார் ஒரு நம்பி என்பதையும், திருநீல நக்கர் சாத்த மங்கையைச் சார்ந்தவர் என்பதையும், நமிநந்தி அடிகளார் அருநம்பி என்பதையும், திருஞானசம்பந்தர் இறைவன் திருவடியன்றி வேறு எதையும் போற்ருதவர் என்பதையும்,