பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 12 காப்புப் பருவம் சோமாசிமாறர்: திருவம்பர் வேதியர். ஐந்தெழுத்து ஒதுபவர். சுந்தரரைத் தம் துணையாகப் பெற்றவர். நித் நியமனம் பூண்டவர். சாக்கியர்: சங்கை மங்கையினர். ஏகாம்பரநாதர் திரு மேனியில் செங்கல் எறிந்தவர். இறை திருவருள் பெற்றவர். சிறப்புலி பார்: திருவாக்கூரினர்; அந்தனர். சிவனடி யார்க்குச் சிறப்புச் செய்தவர். சிறுத்தொண்டர் : இவர் திருச்செங்காட்டங் குடியவர் மன்னவர். தம் ஒரு மகனே அரிந்து இறைவர்க்குப் படைத் தவர். கழறிற்று அறிவார். உழ மண் உலறிய மேனிய ஞய் வந்த வண்ணுனேச் சிவனடியான் என வணங்கியவர். சேர மரபினர். சிவனுர் அளித்த வெள்ளை யானேயில் சுந்தரர் சென்றபோது, அவர்க்கு முன்னுக இவர் குதிரைமீது சென்றவர். கனநாதர் காழி ந க ரி ன ர். சிவனடியார்களாகப் பலரை ஆக்கியவர். அடியார்கட்குத் தொண்டு செய்யும்படி உபதேசித்தவர். சிவகணங்கட்குத் தலைமை வகித்தவர். கூற்றுவ நாயனுர் கள ந்தைப் பதியினர். இறைவன் திருவடிகளேயே முடியாகக் கொண்டு உலகை ஆண்டவர். பொய்யடிமை இல்லாத புலவர்: தமிழ்ச் சங்கத்தில் இருந்த கபில பரணர், நக்கீரர் முதலான நாற்பத்தொன் பதின்மர்கள். சிவபெருமான் திருவடியே பாடும் புலவர்கள். புகழ்ச் சோழர் சிங்கள நாட்டைப் பொடிபடுத்தியவர். சூரிய குலத்தவர். எறிபத்தர்க்குத் தம் வாளே ஈந்தவர். நரசிங்க முனையரையர் தவர்க்குப் பொன் அளித்தவர். புலவர்களும் காமுகர் வடிவில் வந்தவர்க்கும் இரட்டிப்பான பொன் ஈந்தவர். மன்னர் மரபினர்.