பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 iá. காப்புப் பருவம் முனையடுவார்: திருநீடூர்த் தலைவர். போர் முனையில் நின்று போரிடுபவர். தோற்றவர்களோடு தாம் சேர்ந்து வெற்றி கண்டு அவர் தரும் கூலி கொண்டு அப்பொருளைச் சிவனடியார்கட்கு ஈந்தவர். கழற்சிங்கர்: திருவாரூர்த் தியாகர்க்கு வைத்த மலரைத் தம் மனைவி கையால் எடுத்து மோந்ததனால் அவர் கையை அரிந்தவர். இடங்கழியார்: சிதம்பரச் சிற்றம்பல முகட்டினுக்குப் பொன் வேய்ந்த ஆதித்த சோழன் மரபினர். இருக்கு வேளுரினர். தம் செல்வம் சிவனடியார்கட்கு உரியது எனப் பறை அறைந்து அறிவித்தவர். செருத்துணையார்: கழற்சிங்கர் தேவியார் தியாகர்க்கு என வைத்த மலரை மோந்த காரணத்தால் மூக்கை அரிந் தவர். தஞ்சை ஊரினர். புகழ்த்துணையார்: திருப்பத்துாரினர். வறுமையால் வாட்டம் உற்றவர். ஒருநாள் இறைவர் திருவடிமேல் முழுக்குநீரைக் கொட்டும்போது தளர்ச்சியினல் கலசத்தை முடியில் போட்டு நடுங்க, இறைவர் திருவருளால் நிதி பெற்றவர். கோட்புலியார்: திருநாட்டியத்தான் குடியினர் தலைவர். திருநாவலூரர் அருள் பெற்றவர். தம் சுற்றத்தாரை வெட்டி வீழ்த்தியவர். பத்தாய்ப்பணிவார்: திருவாரூர்பிரான் திருவடி பணித் தவர். மயிர்சிலிர்க்க ஆனந்த நீர்பொழிய உடல் நடுங்க, வாய்குழறப் பக்திபூண்டு வணங்குபவர். பரமனேயே பாடுவார்: வடமொழி தென்மொழிதல், தில்லைப்பரமனைப்பாடுபவர். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்: இறைவன் திரு வடிகளில சித்தம் வைத்தவர். இவர்கள் வீடு பேறு எய்தியவர்.