பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 121 நாட்கொண்ட தாமரைப்பூந் தடம்சூழ்ந்த நல்லூர் அகத்தே கீட்கொண்ட கோவனம் காஎன்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்ருே இவ்வகல் இடமே என்று பாடியுள்ளனர். கண்ணப்பர் வேடர் என்பதையும், வாயில் நீர் கொணர்ந்து இறைவன் தலையில் கொட்டித் தமது செருப்புக் காலால் முடிமாலைகளை நீக்கி இறைச்சி படைத்து, இறைவர் கண்களில் குருதிவருதல் கண்டு தம் கண்களை அப்பினர் என்பதையும், குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சி பாரம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் துரயவாய் கலசம் ஆட்ட உவப்பெரும் குருதி சோர ஒருகணை இடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னரே என்று பாடிக்காட்டி யுள்ளனர். சண்டேசுரர் வரலாற்றுக் குறிப்பைப் பாடும்போது, ஆமலி பாலும் நெய்யும் ஆட்டியர்ச் சனைகள் செய்து பூமலி கொன்றை சூட்டப் பொருததன் தாதை தாளைக் கூர்மழு ஒன்ருல் ஒச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத் தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னரே என்றும்