பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி ங் அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்தியக்கண்' என்று எழுதியுள்ளனர். நச்சினர்க்கினியர் உரைகண்டபோது, 'கு ழ வி ப் பருவத்தும் காமப் பகுதி உரியதாகும்” என்று கூறியுள்ளனர். விளக்கம் தரும் இடத்து, குழவியைப் பற்றிக் க. வுல் காக்க என்று கூறுதலாலும், பாராட்டும் இடத்துச் செங்கீரையும், தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரை த்தலும், அம் புலியும், சிற்றிலும், சிறுதேரும், சிறுபறையும் எனப் பெய ரிட்டு வழங்குதலானும் என்பது.” என்று எழுதியுள்ளனர். இவ்வுரைகளையும் விளக்கங்களையும் காணும்போது, பிள்ளைத் தமிழ் பாடும் வழக்கம் தொல்காப்பியர் காலத் தும் அவர்க்கு முன்பும் இருந்தது என்பது வெள்ளிடைமலை என விளக்க மாகின்றதன்ருே? பிள்ளைத்தமிழ், பிள்ளைப் பாட்டெனவும் வழங்கப் பெறும். இச்சூத்திரத்தையும் இச்சூத்திரத்தின் கருத்தையும் ஒட்டியே பின்னல் வந்த பாட்டியல் இலக்கணக்கருத்தாக்கள், மேலும் பல விளக்கங்களுடன் பிள்ளைத்தமிழ்பாடுதற்குரிய இலக்கணங்களை வகுத்து உரைப்பாராயினர். கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் திகழ்ந்த குணவீர பண்டிதர் தாம் எழுதிய வச்சணந்தி மாலை என்னும் வெண் பாப் பாட்டியலில், பிள்ளைத்தமிழ் பாடும் முறையின. 'கண்டுரைக்கில் பிள்ளைக் கவிதெய்வம் காக்கஎனக் கொண்டுரைக்கும் தேவர் கொலை அகற்றி-ஒண்தொடி யாப் சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம் முற்றுவித்தல் நூலின் முறை' என்றும், 'சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானே-போற்றரிய அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே பம்புசி, தேரே. டும் பத்து