பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காப்புப் பருவம் ஆண்டார் வாக்கில் தமிழ்ச் சங்கம் அதில் கபிலர், பரணர், நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல்புலவோர் என்பது காணப்படுகிறது. சுந்தரர் வாக்கில் புலவர்கள் என்பது இல்லை நம்பியார் வாக்கில் புலவர்களே என்னும் சொல் உளது. சேக்கிழார் தம் பாடல்களில் புலவர்' என்ற சொல்லே காணப்படுகிறது. சுந்தரரும் புலவர் என்றுதான் பாடியுள் ளார். இச் சொல் ஆட்சியினல் பொய் அடிமை இல்லாத புலவர் என்னும் தொடர் தனி அடியார் ஒருவரையேதான் குறிக்கும் என்பதும், தொகை அடியார்கள் என்று கருதப் படும் சங்கப் புலவர்களைக் குறிக்காது என்பதும் உய்த்து உணரக் கிடைத்தல் காண்க. சுந்தரர் கருத்துப் 'பொய் யடிமை இல்லாத புலவர் என்பார், தனி அடியாரே அன்றித் தொகை அடியார்கள் அல்லர் என்பதுதான் என்பதை அறுதி யிட்டு உறுதியாகக் கூறிவிடலாம். இதனை அவர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையில் அமைந்த பாடல் போக்கைக் கொண்டே நிலைநாட்டிவிடலாம். சுந்தரர் பொய்யடிமை இல்லாத புலவரைத் தனி யடியாரைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும் பாடலில்தான் ைவ த் து ப் பாடியுள்ளார். தொகையடியார்களைக் குறிக்கும் அனேவரையும் தனித்த ஒரு பாட்டில் அமைத்துப் பர்டியுள்ளார். சுந்தரர் பொய்யடிமை இல்லாத புலவரைத் தொகை அடியாராகக் கருதி இருப்பாரேல், எவ்வாறேனும் தொகையடியாரைக் குறிப்பிட்டுள்ள பாடலில் புகுத்தி இருப்பார். ஆகவே, பொய்யடிமை இல்லாத புலவர் ஒரு தனி அடியாரே என்பது, தெளிவுற அறியவரும் குறிப் பாகும். ஈண்டு ஒர் ஆசங்கை எழக்கூடும். அ. த | வ து தில்லைவாழ் அந்தணர்களும் தொகையடியார்கள் ஆதலின், அவர்களைத் தனி அடியார்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்ட பாடலில் குறித்திருப்பதுபோல் பொய்யடிமை இல்லாத புலவராம் தொகை அடியார்களையும் தனியடியார்களைக் குறிப் பிடும்பாடலில் இனத்துப் பாடினர் என்பது. 'தில்லைவாழ்