பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காப்புப் பருவம் சீலமில ரேனும் திருநீறு சேர்ந்தாரை ஞாலம்இகழ்ந் தருநரகம் நண்ணுமல் எண்ணுவார் பாலணைந்தார் தமக்களித்த படி இரட்டிப் பொன் (கொடுத்து மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடை (கொடுத்தார் என்றதாலும், அதிபத்தர் தம் வறுமை நிலையிலும், 'பொன் திரள்சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் ஒன்றும் மற்றிது என்ன ஆ ளுடையவர்க் காகும் சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடும் திரித்தார் ஆதலாலும், கலிக்கம்பர் தம் நியமம்தவருதபடி, வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர் முன் மேவுநிலை குறித்து வெள்.கி நீர்வாரா தொழிந்தாள் என்று மனம் கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக்கை தறித்துக் கரக நீர்எடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினர் என்பதாலும், கலியநாயனர் செக்குநிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து திலதைலம் பக்கம் எழ மிகஉழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும் தக்கதொழில் பெறுங்கூலி தாம்கொண்டு தாழாமை மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் என்பதாலும், சத்திநாயனர்,