பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காப்புப் பருவம் சேக்கிழார் தொண்டை நாட்டின் வளத்தைத் திருக் குறிப்புத் தொண்டர் புராணத்து மிகமிகச் சிறப்புடன் பாடி யுள்ளனர். அவர் அந்நாட்டின் சிறப்பைத் தொடங்கும் போதே, ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லை பில் கருணைத் தாய ளுள் தனி ஆயின தலைவரைத் தழுவ ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத் துரிய மாதவம் செய்தது தொண்டை நன்னடு நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப வன்மை ஒங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ்பெரும் தொண்டை நன்னடு கறைவி ளங்கிய கண்டர்டால் காதல்செய் முறைமை நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால் பிறைஉ ரிஞ்செயில் பதிபயில் பெருந்தொண்டை நாட்டு முறைமை யாம் என உலகினில் மிகுமொழி உடைத்தால் என்றும், மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலவளங்களையும் சிறப்புற வர்ணித்துள்ளதைக் காணலாம். காஞ்சி புராணத்தும், கந்த புராணத்தும் தொண்டை நாட்டின் வளத்தை நன்கு தெரியலாம். தொண்டை மண்டல சதகத்துள், ' கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடி யொடுதழி இய தொண்டமண்டலம்' என்றும்,