பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 காப்புப் பருவம் பொதுவாகக் கூறப்பட்டாலும் தொண்டை நாடு அவன் காலத்தில் சோழ நாட்டு ஆட்சியில் கலந்திருந்தமையின், தொண்டை நாட்டையும் இங்ங்ணம் செம்மைப்படுத்தினன் என்பது தெரிகிறது. பெரியபுராணமும், என்றும் உள்ள இந் நகர்கலி யுகத்தில் இலங்கு வேல்கரி கால்பெரு வளத்தோன் வன்தி றல்புவி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை சென்று வேடன் முன் கண்டுரை செய்யத் திருத்து காதம் நான் குட்பட வகுத்துக் குன்று போலும்மா மதில்புடை போக்கிக் குடிஇருத்தின கொள்கையில் விளங்கும் என்கிறது. சங்ககால இளந்திரையன், இளங்கிள்ளி ஆகியவர்கள் வளமுற ஆண்டனர். பல்லவர்களும் ஏரி, கால்வாய்களை வெட்டி ஆண்டனர். அங்குச் சைவ, வைணவ, பெளத்த மதங்கள் வளர்ச்சியுற்றிருந்தன. இன்னுேரன்ன சிறப்புக் களும், வளங்களும் பெற்றது தொண்டை நாடு தொண்டை நாட்டின் எல்லே இன்னது என்பதைக் கம்பர், மேற்குப் பவளமலே வேங்கடம் நேர்வடக்காம் ஆர்க்கும் உவரி அணிகிழக்கு-பார்க்குள் உயர் தெற்குப் பிளுகி திகழ்இருப தின்காதம் நற்ருெண்டை நாடெனவே நாட்டு என்றனர். குன்றத்துார் தொன்மையது என்பதாலும், குறும்பர்கள் இருபத்த நான்கு கோட்டங்களாகந் தொண்டை நாட்டைப் பிரித்தனர் என்பதாலும், கரிகாலன் காடுகொன்று நாடாக்கினன் என்பதாலும், அந்நாடுகளில் ஒன்ருன புலியூர்க் கொட்டத்தைச் சார்ந்த குன்றத்துாரும் பழமை யானது என்பது தெரிகிறது. இன்றும் குன்றத்துாரின்