பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 காப்புப் பருவம் சம்பந்தரால் சைவரானவர். வடபுல மன்னரைத் திருநெல் வேலியில் வென்றவர். வாயிலார் திருமயிலையினர். வ்ேளாளர் மரபினர். உள்ளக் கோயில் அமைத்து அறிவு விளக்கேற்றி ஆனந்த நீராட்டி அன்பை நிவேதனம் செய்தவர். முனை யடுவார் சோழ நாட்டுத் திருநீடூரின் வேளாளர். போர் வீரர். பகைவர்க்குப் பயந்தவர்கள் இவரின் துணை பெறுவர். இவ்வாறு உதவிபுரிந்து அதனல் வரும் பொரு ளால் அடியார்கட்கு அமுது படைப்பர். அவர்கள் விரும்பு வனவற்றைச் செய்வர். இவ் ஐவரையும் இறைவர், மிகுதியும் விரும்பினர் என்பத ைதிரு பிள்ளை அவர்கள் முதல் அமர்ந்த' என்ற தொடரில் கூறியுள்ளனர். முதல் என்பவர் முன்னேப்பழம் பொருட்கும், முன்னைப் பழம் பொருளான இறைவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர்களுள் முதன்மையான முழு முதற் பொருள். அமர்ந்த என்பது விரும்பி என்னும் பொருட்டு. இறைவன், ஆன்மாக்களை ஆக்கி, அளித்து, அழித்து, மறைத்து, அருளிவருதலின் ஐந்ததிகாரி எனப்பட்டான். இறைவன் இவ்வைந்து தொழிற்கும் அதிகாரி என்பதை மணிமொழியார், போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுதநின் ஆந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈரும் இணை அடிகள் போற்றிமால் நான்முகனும் காணுத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டிருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய் என்று கூறுதல் காண்க.