பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 163 இவ்விரி நூலே 'உலகெலாம் அறியத் தெருட்டினர்' என்பது. 'மன்றுளார் அடியார் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்' என்றும் 'மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால் முதல்வனுர் அடிச்சார்ந்த முறைமை யோரும், நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும், நல்தொண்டர் காலத்து முன்னும் பின்னும்’ என்றும் சேக்கிழார் அறிவித்திருப்பதால் எல்லா உலகங்கட்கும் இது பொருத்தமான நூல் என்பதும், உலகறியும் பெருமைக் குரியதும் இதுவே என்பதும் பெறப்படுகின்றன. சேக்கிழார் பெருமாளுர் பேராசிரியர். பேராசிரியர் என்பதால்தான் பெரிய புராணமாம் அப்பெரு நூலை இயற்ற முடிந்தது. அநபாய சோழனுக்கும் உணர்த்த முடிந்தது. ஆகவே, அவரை, 'குரவிற்கு அமைய' என்றனர். ஆசிரி யர்கள், 'செங்குவளே மலர் அணிவர்” என்பது மரபு. ஈண்டுச் சேக்கிழார் அநபாயனுக்குக் குருவாக அமைந்த மையின், 'குவளை மலர் புனேந்தது பொருத்தமே. சமணர் பொய்ந்நூல் இது மறுமைக்கு ஆகாது. இம்மைக்கும் அற்றே. வளம் மருவுகின்ற சிவ கதை இம்மைக்கும் மறு மைக்கும் உறுதி' என்று மன்னர்மன்னனுக்கு மதி அமைச் சராம் சேக்கிழார் கூறினர் எனில், இஃது அமைச்சர் பண்பி; நின்று பேசியது அன்று ஆசிரியர் நிலையில் நின்று அறிவித்த தாகும். இது குறித்தே திரு பிள்ளே அவர்கள், "தெருட்டு குரவில்' என்றனர். அநபாயனும் இவரைக் குருவாகக் கொண்டிலன் எனில், இவர்க்கு வெண்சாமரை விதியிருள். அநபாயன் கவரி வீசியதைச் சேக்கிழார் புராணம், 'சேவையர் காவலரை முறைமை பெற ஏற்றி அரசஆ கூட ஏறி முறைமையினுல் இணைக் கவரி துணைக்கரத்திால் வீச” என்று மொழிகிறது. இங்ங்ணம் வீசியது குறித்து மன்னன் மகிழ்ந்ததை, 'இதுவன்ருே தான் செய்த துவப் பயன்' என்றும் கூறுகிறது. குருவாக அமைகிறவர்கள் குவளை மவர் அணிதல் மரபாகும். வேளாளர்கட்கும் இம் மலர்மாலேயே உரியது.