பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி சைவர்கள் ஆதலின் வீர சைவ்ப் பெரியார்களேயும் காப்புப் பருவத்தில் இயைத்துப் பாடியுள்ளனர். திருவாவடுதுறை பூ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பாடிய திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழில் பிரமீசர், திரு நிலைநாயகி, திருநீறு, கான்மாறி ஆடிய கடவுள், சிற்சக்தி, விநாயகக் கடவுள், முருகக் கடவுள், திருப்பொய்கை (சீர் காழிப் பிரம்ம தீர்த்தம்) பன்னிருதிருப் பெயர்ப் பழம்பதி (சீர் காழித்தலம்) திருப்பதிகம், சட்டைநாதர் மற்றைத் தெய்வங்கள் ஆகிய இவர்கள் காக்க எனப் பதினொரு பாடல்களுடன் காப்புப் பருவம் திகழ்கின்றது. ஈண்டு பூர் மாசிலாமணி தேசிகர் திருமால் முதலிய தேவர்கள் திருஞானசம்பந்தரைக் காக்க எனக் கூருமல், திருமுத்தின் சிவிகை மிசை அசையவரு மணியைச் சேவித்தங் குடன்வருவர்’’ என்று பாடி இருப்பதை நன்கு சிந்திக்கவும். இதன் குறிப்பு, திருமால், பிரமன் முதலானவர் திருஞான சம்பந்தரைப் போற்றும் தகுதியினரே அன்றிக் காக்கும் தன்மையர் அல்லர் என்பதாகும். திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடியுள்ள திருப் போரூர்ச் சந்நிதி முறையில் அடங்கியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் நூலில் திருமால், சதாசிவன், பராசக்தி, விநாயகர், திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாட் சரம், திருமகள், சரஸ்வதி, பல தேவர் ஆகியோர் காக்க எனப் பத்துப் பாடல்களைக் கொண்டு காப்புப் பருவம் இலங்குகின்றது. காஞ்சிபுரம் பூரீ சிதம்பர முனிவர் பாடியுள்ள பூரீ சுப்பிர மணியக் கடவுள் rேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் நூலில், விஷ்ணு, பரமசிவம், உமையம்மை, விநாயகர் வயிரவர், வீரபத்திரா, பிரமன், காளி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகிய பத்துத் தெய்வங்கள் காக்க எனப் பத்துப் பாடல்களைக் கொண்டு காப்புப் பருவம் திகழ்கின்றது.