பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 காப்புப் பருவம் 'பத்தராய என்றெடுத்தருள் திருக்கவி' என்றது திருத் தொண்டத் தொகையில் உள்ள பத்தாவது பாட்டாகும். பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனேயே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்பது. சுந்தரர் தனித்தனி அடியார்கட்குத் தாம் அடிமை என்று கூறியிருப்பினும், முற்ற முடிய எல்லா அடியார்களேயும் கூடி முடித்ததாக அமையாது. ஆகவே அவர், பத்தராய்ப் பரமனேப் பணிவார், பாடுவார், சித்தத்தைச் சிவன் பால் வைத்தார். திருவாரூரில் பிறந்தார், முப்போதும் இறைவன் திருமேனியைத் தீண்டிப் பூசிப்பார். திருநீறு பூசிபோர், தமக்குப் பின்னல் இறைவன் திருவடித் தொண்டர் ஆயினர் எவர்களாயினும் அவர்கட்கெல்லாம் தம் பரந்த மனப் பான்மையால் அடியேன், அடியேன் என்று பாடிக் காட்டி இருக்கின்ருர் எனக் கொண்டு அப்பாடல் அருள்பாடலாகவும் திருப்பாடலாகவும் இருத்தலின் திரு பிள்ளை அவர்கள், 'அருள் திருக்கவி' என்றனர். திருநாவலூரர் தாம் விரும்பிய வண்ணம் இறைவர் துணையால் பரவையார், சங்கிலியார் ஆகிய இரு மாதர்களே மனந்தனர். மனந்தம் அவ்விருவர் வாயிலாகப் பிள்ளேப் பேற்றை உற்றிலர். என்ருலும், இரு பிள்ளைகட்குத் தந்தை யார் ஆயினர். அப்பிள்ளைகள் கோட்புலியார்தம் மக்களாகிய சிங்கடி, வனம்பகை எனும் இருவர்கள். இவர்களேக் கோட்புலி யார் நம்பி ஆரூரர் முன் நிறுத்தி, அவர்களே அடிமைகளாக ஏற்றருள வேண்டியபோது, அவ்வேண்டுகோளே மருது மக்களாக ஏற்று அருளினர். இதனைச் சேக்கிழார்,