பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f86 காப்புப் பருவம் முவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக் கப்பால் முதல்வனர் அடிச்சார்ந்த முறைமை யோரும் நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நற்ருெண்டர் காலத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை புதியமதி நதிஇதழி பொருந்த வைத்த சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும் செப்பிய அப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே என்று கூறிஞர். ஆளுல், நம்பி ஆண்டார் நம்பிகள், அவர் களேச் சிவகனத்தார் என்றும், சுந்தரர் குறிப்பிட்ட அடியார் கட்குப்பின் சந்திர சேகரப் பெருமான் திருவடியுற்ருரும் என்று கூறியுள்ளனர். இதனை 'நாவலூர் மன்னவன் தொகையில் பிறைசூடி பெய் கழற்கே ஒருக்கும் மனத்தொடு அப்பால் அடிச்சார்ந்தார்' என்றும், 'தெரிக்கும் அவன் சிவன் பல் கணத்தோர்' என்றும் கூறியிருத்தலேக் காணவும். சேக்கிழார் தமிழ் நாட்டில், சைவ சமயத்தைச் சார்ந்த வர்களையும், சுந்தரருக்குப்பின் இறை அன்பில் ஈடுபட்டு அவன் திருவடியில் புகுந்தவர்களே யும் மட்டும் குறிப்பிட் டிலர். தமிழ் நாட்டுக்குப் புறம்பே எந்நாட்டில் பிறந்தவர் களாயினும், எம்மதத்தினராயினும் இறைவனடியில் அன்பு கொண்டு இனேந்தவர்கள் யாவரையும் அப்பால் அடிச் சார்ந்தார் என்றே குறிப்பிட்டுச் சென் ருர். இது கருதியே இறைவரைப் பொதுச் சொல்லால் முதல்வனுர் என்றும், மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால் முதல்வனுக் அடிச்சார்ந்த முறைமையோர் என்றும் கூறிய அடிகளே ஊன்றிப் பார்க்கவும். பிற மதத்தவர்கட்கும் சிவபெருமானே முதல்வன் என்பது எவரும் ஒப்பமுடிந்த முடிபாகும். தென்ன டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றனர் மணிமொழியார். விரிவிலா அறிவி னேர்கள் வேருெரு சமயம் செய்து எரிவினல் சொன்ன ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும்