பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி 任弼 ஈண்டுச் சில இன்றியமையாக் குறிப்புக்களையும் உணர்த்து தல் நன்று. பிள்ளைத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் அகவல் விருத்தத்தால் அமைந்துள்ளன. பாட்டியல்காரர்கள் வகுப் பாலும் அமையலாம் என்கின்றனர். வகுப்பு என்பதும் விருத்தமே. ஆனல் இஃது ஒர் அடியில் பற்பல சீர்கள் அமையப் பாடப்படும். ஒரு வகுப்பின் கால் அடியே ஒரு தனிப் பாட்டுப் போலக் காணப்படும். அவ்வகுப்புப் பாடல்களைக் காண விழைவார் அருணகிரியார் வாக்காக உள்ள வகுப்பில் காணலாம். திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் திசைக்கிரியை முதல்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்க அற விசைத்ததிர ஒடும் சினத்தவுணர் எதிர்த்தான களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே. இது வேல் வகுப்பு. மேலே காட்டிய செய்யுள் ஒரு முழுச் செய்யுள் அன்று. ஒரு செய்யுளின் நான்கடிகளுள் ஒர் அடியாகும். இது முழுச் செய்யுளின் ஈற்றடி. வகுப்புப் பாவால் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் எதுவும் கண்ணுக்குத் தென்பட்டிலது என்ருலும், சிற்சில பிள்ளைத் தமிழ் நூல்களில் வகுப்புப்போன்ற பாடல்கள் காப்புப் பருவத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டிற்குக் கூறவேண்டுமானுல் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழில் உள்ள சிதம்பரேசர் பற்றிய பாடலையும், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் கங்காதேவிமீது பாடப்பட்ட பாட்டையும்