பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 221 திருக் குறிப்புத் தொண்ட நாயஞர வண்ணுர் வகுப் பினர். அவ்வகுப்பினர் செயலேயும் சேக்கிழார் நன்கு அறிந்து கூறும்திறம், மிகமிகப் பாராட்டற்குரியது. திருக்குறிப்புத் தொண்ட நாயனர் குலத்தொழிலே, குறித்த பொழு தேஒலித்துக் கொடுப்பதற்குக் கொடுபோந்து வெறித்தடநீர்த் துறையின்கண் மாசெறிந்து மிகப்புழுக்கி என்று குறிப்பிட்ட குறிப்பைக் காண்க. மாசெறிதலாவது, நீரில் தோய்த்துக் கல்லில் மோதல், புழுக்கலாவது உவர்மண் ஊட்டி வெள்ளாவி வைத்தல். இச்செயல்கள் நுட்பமான செயல்கள் அல்லவோ? அடியவர்கள் அன்பின் மிகுதியால் செயற்கரிய செயல் களேச் செய்பவர். அங்ங்னம் செயற்கரிய செயல்களைச் செய் பவர்கட்கு ஏற்ற முறையில் இறைவனும் திருவருள் டிரக்க வேண்டியவய்ை உள்ளான். சிறுத்தொண்டர் நாயஞர் வைரவராக வந்த இறைவர் விருப்பப்படி தம் மைந்தனத் தடித்து கறியமுதாக்கி உணவு படைத்தனர். அவ்வாறு படைத்த அடியவர்க்கு இறைவர் எம்முறையில் அருள் செய் தனர்? துணித்துக் கறியமுதாக்கப்பட்ட மகனே எழுப்பித் தந்தனர். காட்சி தருகின்றபோதும், ஏனேய அன்பர்கட்குத் தாமும் தம் தையலுமாக இருந்து காட்சியளிப்பதுபோல் காட்சியினை அளிக்காமல், தம் இளைய குமாரளும் முருகனுடன் காட்சி தந்தனர். இவ்வாறு காட்சி அளித்ததன் குறிப்பு யாது? குழந்தையை அறுத்துக் கறி சமைத்துப் படைக்க என்று கேட்ட யாம், மகனைப் பெருத மாண்பிலி போலும், என்று கருதாதே. யாமும் உன்போல மகனைப் பெற்ற மான் பினரேம். உன் அன்பின் மாட்சியை அவனி யறியவேஇங்ஙனம் உன்னைச் செய்யுமாறு செய்தோம்' என்பதை விளக்கவே என்பதன்ருே? இதனைச் சேக்கிழார், 'திருவாக்கிய மலையந்த