பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 247 கைகளை உளத்தில்கொண்டே 'நாள்மலர்கொடு தின் அடி ஏத்தி நயத்தலை மேற்கொண்டு கூம்பல் செய்கையேம்’ என்று இவ்வாறு கூறப்பட்டது. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே என்ற மணிமொழியார் மணிவாக்கையும் காண்க. நாம் இறைவற்கு உகந்த செயல்களேச் செய்தால் அதற்காகக் கூலிகேட்கும் உரிமை நமக்கு உண்டு. அப்பர் பெருமாளுர் தாம் மேற்கொண்ட செயற்கு இறைவனே நோக்கிக் கூலி கேட்கிரு.ர். அதனை, கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உன தருளால் திருவாய் பொவியச் சிவாய நமஎன்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர்,அரனே என்ற திருப்பாடலில் காண்க. இக்கருத்தை ஒட்டி அன்ருே ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் கோமான் நீ அருளும் கூலி எவன் கொல்1 என்று வினவுகின்ருர், விரும்பியது கிடைத் தால் எவர்க்கும் மகிழ்ச்சிதானே! அதனையே ஈண்டு அவாயது நல்கில் குலாவும் உவப்புறுவேம்’ என்ருர். சேக்கிழார் உத்தமச் சோழப்பல்லவர் என்ற பட்டம் பெற்று