பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 261 படல் அடியாரைப் பூசித்தல் ஆகிய புறத் தொழிலால் இறைவனை நோக்கி நோக்கிச் செய்யும் வழிபாடாகும் என லாம். இறைவர் மணிமொழியார்க்கு உபதேசித்த உபதேச மொழிகள் கொண்டும் இக் கருத்தைத் தெளியலாம். ஆவ லால்எமக் காம்மலர் மரங்கல் ஆக்கல் அம்மலர் பறித்தல்அம் மலரால் தாவி லாவகை தார்.பல சமைத்தல் தனப்பில் எம்புகழ் சாற்றல்அன் புடனும் மேவும் ஆலயம் அலகிடல் மெழுகல் விளங்க நல்விளக் கிடுதல்எம் அடியார்க் கேவல் ஆனவை செய்தல்இச் சரியை இயற்ற வல்லவர்க் கெம்.உல களிப்போம் என்பது வாதவூர் அடிகள் புராணம். சிவஞான சித்தியாரும் இம்மார்க்கத்தின் இயல்பை இவ்வாறே எடுத்து இயம்புகிறது. அதுவே, தாதமார்க் கம்சாற்றில் சங்கரன்தன் கோயில் தலம்.அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப் போதுகளுக் கொய்துபூந் தார்மாலே கண்ணி புனிதற்குப் பல்சமைத்துப் புகழ்ந்து பாடித் தீதில் திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் செய்து திரு வேடங்கண் டால்அடியேன் செய்வ தியாதுபணி யீர்என்று பணிந்துஅவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியை செய்வோர் ஈசன் உல கிருப்பர் என்பது. இவ்வாறு இச் சரியை மார்க்கத்தைத் தாம் மேற் கொள்ளவில்லையே என்று மணிமொழியார் மொழிவதையும் காண்க. ' ஆமாறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்