பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 செங்கீரைப் பருவம் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளா யே என்ற மணிமொழியாரது மாண்புறு மொழிகளும் குறிப்பிடு வனவற்ருல் உணரலாம். யோகமாவது (சகமார்க்கம்) அகப்புறச் செயல்களால் ஆகம முறைப்படி வழிபட்டபின், அகவழிபாட்டால் இறை வனைப் பூசிப்பதாகும். அதாவது தியான சாமதிகளான அகத் தொழில் ஒன்றினல் இறைவனது அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு. இதனே வாதவூரர் புராணம், முக்கு ணம்புலன் ஐந்துடன் அடக்கி மூல வாயுவை எழுப்பிரு வழியைச் சிக்கெ னும்படி அடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த் தக்க அஞ்செழுத் தோர்எழுத் துருவாம் தன்மை கண்டருள் தரும்பெரு வெளிக்கே புக்க முந்தினர் எம்உருப் பெறுவார் புவியில் வேட்டுவன் எடுத்தமென் புழுப்போல் என்று விளக்குகிறது. சிவஞான சித்தியார், சகமார்க்கம் புலளுெடுக்கித் தடுத்துவளி இரண்டும் சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள் அகமார்க்கம் அறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங் கணேந்துபோய் மேலேறி அலர் மதிமண் டலத்தின் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க யோகம் முற்றும் உழத்தலுழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர் என்று கூறுகிறது. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புவத் தேனை வழிதிறந் கேத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே