பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 267 பாலனும் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளுக ஆற்ருல் மாலும் நான் முகனும் காணு வடிவுகொண் டெதிரே வந்து காலனர் உயிர்செற் ருர்க்குக் கமழ்ந்த குங் குலியத் துசயம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார் என்று குங்கிலியக்கலயர் தொண்டு பற்றிச் சேக்கிழார் கூறி யுள்ளார். பெருமிழலைக் குறும்பஞர் யோக நெறியினர் என்பதைச் சேக்கிழார், நாலு கரணங் களும் ஒன்ருய் நல்ல அறிவு மேற்கொண்டு காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு ஏல வேமுன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப மூல முதல்வர் திருப்பாதம் அடைவார் கயிலை முன் அடைந்தார் என்று பாடியுள்ளார். பெருமிழலைக் குறும்பர் சிறந்த யோகி என்பதைத் துறை மங்கலச் சிவப்பிரகாசரும், 'பெருமிழலைக் குறும்பரெனும் பரம யோகி' என்று சிறப்பித்துள்ளனர். யோகியர் செயலைப் பற்றி முன்னர் விளக்கப்பட்டதையும், இந்நாயனர் செய லையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவர் யோகியர் என்பது தெள்ளத் தெளிய அறிய வரும். திருமூல நாயனர் ஞான நெறிக்கு ஏற்ற சான்ரு ய் இருப்பவர். அவரைப் பற்றிக் கூறவந்த இடத்துச் சேக்கிழார் பெருமாளுர், உள்ளுணர் வான ஞான முதலிய ஒருநான் குண்மை தெள்ளுதீந் தமிழால் கூறும் திருமூலர் என்றும்,