பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?盛 செங்கீரைப் பருவம் கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாக் கவிஞர் மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூல் முகில்கள் பொழிந்த சீதநீர் பொற்புறு சாடியில் பொங் வழிந்த பாலெனத் திச்ைதொறும் இழிந்தன மன்னே என்று கூறுகிறது. இவ்வேறே காஞ்சி புராண ஆசிரியரும், கனபெயல் எழிலிக் கூட்டம் கவிவீசும் பகடு போழ்ந்த நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியும் தெண்ணிர் புனைமறை வசிட்ட மேலோன் செருத்தல்ஆன் பொழிந்த - திம்பால் வனைபுகழ் வெள்ளம் என்னத் திசைதொறும் வழிந்த மன்னே என்று கூறியுள்ளார். - ஆற்று நீர் பல இடங்களில் தன் நீரை நிறைத்துச் செல்லும் இயல்பினைக் கம்பர், தாதுகு சோலே தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுப்புனல் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனம்தோறும் வயல்கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிர்என உலாய தன்றே என்றனர். இவ்வாறெல்லாம் பாலாறு பாய்ந்து திருப்பாற் கடலில் புகுந்து, தானும் திருப்பாற் கடல்போல இருந்தமையின் எது திருமால் பள்ளி கொள்ளும் திருப்பாற் கடல் என்று மக்களால் அறிய ஒண்ணு நில்லயில் இருந்தது என்பதை