பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தாலப் பருவம் புலவர் அமுது கொள என்பது புலவர்கள் சோறு ண்ண என்பதோடு, தேவர் அமுது உண்ண எனவும் அரம்பை எழுதல் என்பது, வாழை மரங்கள் வளர்தல் என்பதோடு தேவலோக மாதர்கள் குன்றத்துருக்குக்கு வர எழுதல் எனவும், நாகேசன் வைகுதல் என்பது நாகேச்சுரம் தங்கி இருத்தல் என்ற பொருளுடன், பாம்புகட்கு அரசனை ஆதிசேடன் இருத்தல் எனவும், திருமடந்தை காமுறுதல் என்பது செல்வம் இருக்க விரும்புதல் என்ற பொருளுடன் இலக்குமி விரும்புதல் எனவும், கருமால் கிடந்து துயிலல் என்பது கரிய மேகங்கள் படித்திருத்தல் என்ற பொருளுடன் திருமால் அரிதுயில் அமர்தல் என்ற பொருளையும் தருதலின் இப்பாடல் இரட்டுற மொழிந்த சிலேடை அணியாகும்.(23) 3. முந்த எழுமாற் றுயர்பொன்னுல் முழுச்செம் மணியால் மாளிகையும் முதுசூ விகையும் தெற்றிகளும் முகப்பும் பிறவும் அமைதலினுல் இந்த நகரம் பொன்னகரத் தினும்பிக் கிமைத்தல் விதிஉளத்தில் எண்ணி ஆடு உம் மகடுஉவாம் எல்லா உயிரும் விழி இமைத்தல் நந்த அருட்சம் பந்தச்மணம் நண்ணி பவர்க்கும் கதிகொடுத்த நலம்போல் இதுசார் புவிஅகத்து நகர்க்கெ லாம்செய் தனன் என்று சந்தத் தவச்சொல் குன்றத்துர்த் தலைவ1 தசலோ தாலேலோ சகலா கமபண் டிததெய்வச் சைவ தாலோ தாலேலோ tஅ. சொ. முந்த-முதன்மையாக, சூ வி ைக-நிலா முற்றங்கள், தெற்றிகள்திண்ணேகள், முகப்பு-முற்பகுதிகள்,