பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி శ్రీ శ్రీల வரும்முறைமைப் பருவத்தில் வளர்ப்புகலி பிள்ளையார் அருமறைகள் தலே எடுப்ப ஆண்டதிரு முடிஎடுத்துப் பெரும்மூவர் தொண்டல்லால் பிறிதிசையோம் என்பாt திருமுகமண் டலம்.அசையக் செங்கீரை ஆடினும் (போல் நாமறியோம் பரசமயம் உலகிர்எதிர் நடவாது போமகல என்றங்கை தட்டுவதும் புனிதன்பால் காமறுதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல் தாமரைச்செங் கைகளிளுல் சப்பாணி கொட்டினுள் சூழவரும் பெருஞ்சுற்றத் தோகையரும் தாதியரும் காழியர்தம் சீராட்டே கவுணியர்கற் பகமே என் றேழிசையும் பலகலையும் எவ்வுலகும் தனித்தனியே வாழவரும் அவர்தம்மை வருகவகு கென அழைப்ப சிறுகணித்தேர் தொடர்ந்துருட்டிச் செழுமணல்சிற் றில்களிழை நறுநுதல்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும் குறுவியர்ப்புந் துளிஅரும்பக் கொழுமபொடிஆ டியகோலம் மறுகிடைப்பேர் ஒளிபரப்ப வந்துவளர்ந் தருளினுள் என்னும் இப்பாடல்களில், காப்புப் பருவம், தாலாட்டுப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், வருகைப் பருவம், சிறுதேர்ப்பருவம், சிற்றில் பருவங்கள் பொருந்தி இருத்தலே நோக்குக. முத்தப்பருவக் குறிப்பினைக் கண்ணப்ப நாயனர் புராணத்தில் அமைத்துள்ளனர். பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழைஎனப் பொற்கை நீட்டப் பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழைக் கைக்கொண் டோச்ச இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணிர் மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தம் கொள்ள மாற்றி என்பது அந்தப் பருவக் குறிப்புள்ள பாடல்,