பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தாலப் பருவம் செல்வராம் திருஞானசம்பந்த சுவாமிகள் 'கற்ருங்கு எரி ஒம்பி, கலியை வாராமலே, செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்' என்று எரிஒம்பலைச் சுட்டியதன் மூலம் உணரலாம். பழம் பாடல் ஒன்று இந்த எரிஒம்பல் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது. அப்பாடல், நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்வு இல்லந் தொறுமூன் றெரியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ் என்பது. இந்த எரிஓம்பல் குன்றத்துாரில் தடைபடாது நடந்து வந்தது என்பதை உணர்த்த 'நெருப்பு மணக்கும் குண்டமெலாம்' என்று கூறினர். நெருப்பாவது ஒமத்தி, வேதாக்கினி. குன்றத்துரர் வாசிகள் அன்பு நிறைந்த உள்ளத்தினர். அவர்கள் தம் இல்லம் நோக்கி வந்தவ ரிடத்தில் மட்டும் அவ் அன்பைக் காட்டக் கூடியவர் என்பதன்றித் தெருவிலும் அவரைக் காணும்தோறும் அவ் வண்ணம் காட்டும் இளல்பினராய்த் திகழ்பவர் என்பதைத் தான் 'நேயம் மணக்கும் வீதி எலாம்' என்று கூறியுள்ளார். இவ்வூர் திருவிழாச் சிறப்புக்கும் குறைவற்றது என்பதும் தெரியவருகிறது. 'சாறுமணக்கும் குன்றத்துார்’ என்ற தொடரே இதற்குப் போதுமான சான்ருகும். நேயம் மிக்கவராய் அங்கு வருபவரை மெய்யன் பர்கள் நல்வரவு கூறி நன்மொழியே பேசி உபசரிப்பதை இன்றும் காணலாம். திருநாகேச்சரத்தும் நத்தத்தும் திருவிழாக்கள் இன்றும் நடப்பதை நேரில் காணலாம். இப்பாடலில் மணக்கும் என்னும் சொல் பல பொருளில் ஆளப்பட்டிருத்தலின், இது சொல் பொருள் பின், வருநிலை அணிக்கு எடுத்துக் காட்டாகும். (26)