பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தாலப் பருவம் உடம்பு எத்தகையது என்பதை மணிமேகல்ை, வினேயின் வந்தது வினைக்கு விளைவாயது புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவின் செற்றக் கொள்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இது என்று தெளிவுறக் கூறுகிறது. இதனை உட்கொண்டே ஆசிரியர் 'அங்கம் எடுத்துழல் துன்பம்,' என்றனர். பெரியபுராண நூலைப் படிப்பதன் பயன் பெரிது. இதனை சேக்கிழார் பெருமானுரே தெள்ளத் தெளிய எடுத்து மொழிந்துள்ளார். தமது நூலைச் சூரியனுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிருர் புலவர் பெருமானுர். சூரியன் உலகில் உள்ள புற இருளை நீக்குகிறது. அதுபோல இப் பெரிய புராணமாம் திருத்தொண்டர் புராணம், மக்கள் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞான இருளேப் போக்கவல்லது என்கிருர். அஞ்ஞானம் ஒழிந்தால் மெய்ஞ்ஞானம்தானே நிலவும், மெய்ஞ்ஞான மாகிய பலனைத் தவிர்த்துப் பெறவேண்டியது யாதுளது? ஒரு நூலால் அடைய வேண்டிய பொருள்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்றும் நூற்பொருள்களையும் மெய்ஞ்ஞானத்தால் பெறலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆகவே, தொண்டர் புராணம் அக இருளே நீக்கி, ஞான ஒளியை நல்கும் என்று கூறுவதால் பயனைக் கூறியதாகும் இதனைச் சேக்கிழார், இங்கிதன் நாமம் கூறின் இவ்வுல கத்து முன்ள்ை தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற