பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 305 இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன்அணைவாய் என மொழிந் தப்பரிசே தில்லேவாழ் அந்தணர்க்கும் எரிஅமைக்க மெய்ப்பொருளா ஞர்அருளி அம்பலத்தே மேவினர் என்பது அக்கட்டளை மொழி. இறைவர் சுந்தரருக்கும் அடியார் பெருமையினையும், அருமையினையும் அருளிச் செய்ததை, பெருமையால் தம்மை ஒப்பார் பேனலால் எம்மைப் பெற்ருர் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்ருர் அன்பிளுல் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்ருர் இவரைநீ அடைவாய் என்று' அருளியதாலும், சுந்தரரைப்பற்றிச் சங்கிவியாரிடம் கூறும்போது, சாரும் தவத்துச் சங்கிவிகேள் சால் என்பால் அன்புடையான் மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் யாரும் அறிய யான் ஆள் உரியான் உன்னை என இரந்தான் வார்கொள் முலையாய் நீஅவனே மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்ருர் என்று எடுத்து மொழிந்திருப்பதாலும், இறைவர் அடியார் அருமையும் பெருமையும் நாளும் அறி அம்பலவாணர் எனப் பட்டார். இறைவன் உள்ளிருந்து நமக்கு உணர்த்திலர் எனில், நம்மால் யாதும் செய்ய இயலாது. இதனே வற்புறுத்தவே அப்பர் பெருமாளுர், 20