பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பத்திச் சுவைநளிை சொட்டச் சொட்ட்ப் பாடிய கவிவலவ பயனில தாகும் சிந்த மணிவழி படர்தல் எனப்போகித் துத்திச் சுமையொரு தோள்ளைத் திடுபுல் உயர்த்தோன் மனம் அடியார் உறுசெயல் நாடப் புரிமதி வலவ! ஒலாஅரு கந்தர்திறம் முத்தித் திறம்அல என்றள விலர்பால் முற்றிச் சிவமடைய முயல்செயல் வலவ வயல்கண் மடைச்செறி முத்தம் அனைத்தினையும் தத்திப் புனல்பாய் குன்றைத் திருமுனி தாலோ த லேனோ சைவப் பயிர்தழை யத்தழை யுர்பு:பல் தாலோ தாலேலோ (அ. சென, நனி-மிகுதியும், கவிவலவ-கவியில் வல்ல வரே, சிந்தாமணி-ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருகிய நூல், படர்தல்-செல்லுதல் உத்தி-படத்தையுடைய ஆதி சேடன், புல்-புலிக் கொடி, உயர்த்தோன்-பிடித்தவனுகிய சோழன், உறு-பெரிய, புரி-செப்த, மதிவலவ!-அறிவி வல்ல வரே, ஒலா-கூடாத, அருகந்தர்-சமணர், திறம்-வழி, முத்திமோட்சம், அளவிலர்பால்-அளவில்லாத பல்லோர் முற்றி நல்வினே முற்றி, சிவம்-முத்தி, செறி-மிகுத்த, புனல்-நீர். விளக்கம்: பெரிய புராணத்தில் பக்திச் சுவை அமைந்த கவிகள் பல்கியுள்ளன என்பதைக் கூறவேண்டா. நூல் முழுமையும் பக்திச் சுவை மலிந்தே கானப்படும். இந்தப் பக்திச் சுவை அமைந்த கவிகளே அடியார்களின் வரலாற்றில் தான் சேக்கிழார் அமைத்துப் பாடியுள்ளார் என்றும் கூற இயலாது. இயற்கை நிகழ்ச்சியிலும் இந்தப் பக்திச் சுவுை