பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 தாலப் பருவம் நிலமகள்' என்பது மளுேன் மணியம். ஆகவே, ‘மண்டல வேலைப்புவி' என்றனர். பக்தி மார்க்கத்தை நிலைநாட்டச் சேக்கிழார் அமைத்துள்ள கவிகள் பற்பல. இப்பகுதி இருபா லாகி இயலும். ஒன்று ஆண்டவனிடத்தில் காட்டும் பக்தி: 1ாற்ருென்று அடியார் இடத்தில் காட்டும் பக்தி. இறைவ னிடத்தில் பக்தி எழுமாறு செய்யும் முறையில் பாடியுள்ள கவிகளில் ஒன்று, கையும் தலைமிசை புனஅஞ் சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களுடன் உருகும் பரிவின பேறெய்தும் பெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரு மின் தாழ் சடையொடு நின்ருடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்.அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்ருல் என்பது. அடியார் பக்தியின் நிலையைக் கூறும் பாடல்களுள் ஒன்று, மழையில் கரைந்தங் குவர்ஊறி மேனி வெளுத்த வடிவினுல் உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என் றுணர்ந்தே இழையில் சிறந்த ஒடைநுதல் யானைக் கழுத்தின் நின்றிழிந்து விழைவில் பெருகும் காதலிளுல் விரைந்து சென்று கைதொழுதார் என்பது. இதில் சேரர் பெருமாளுர் அரசராக இருந்தும், சிவனடியார் என வண்ணுனே எண்ணி வணங்கியதைக் காண்க. இவ்வாறு பக்திமார்க்கநிலையினை இத்துணை அழகுற அறிந்து உணர்த்தியவர் நம் சேக்கிழார் அல்லரோ? திண்ணணுர் இறைவர்க்கு இறைச்சியினை ஊட்டும் நிலையினைப் பாடவந்த சேக்கிழார்,