பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 379 புலவர் பெருமக்கள் இயற்கையில் நிகழும் நிகழ்ச்சி யினைத் தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பத் தம் குறிப்பை அதனோடு தொடர்பு படுத்திப் பாடுவது இயல்பு. இது குறித்தே இத்தகைய பாடல்கள் தற்குறிப்பு ஏற்ற அணியின் பால் படும் என்பர். திருஞான சம்பந்தர் குழவிப் பருவத்தில் செங்கீரை ஆடினர். அதனைச் சேக்கிழார் குறிப் பிடுகையில், வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார் அருமறைகள் தலைஎடுப்ப ஆண்டதிருமுடி எடுத்துப் பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோம் என்பார் போல் திருமுகமண் டலம்.அசையச் செங்கீரை ஆடினர் என்றும், சப்பாணி கொட்டியருளியதை அறிவிக்கும்போது, நாம்அறியோம் பரசமயம் உலகீர் எதிர் நடவாது போம்அகல என்றங்கை தட்டுவதும் புனிதன்பால் காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவதுபோல் தாமரைச்செங் கைகளினுல் சப்பாணி கொட்டினர் என்றும், தவழ்தலைச் செய்ததைக் குறிப்பிடும்போது, விதிதவறு படும்வேற்றுச் சமயங்கள் இடைவிழுந்து கதிதவழ இருவிசும்பு நிறைந்தகடி வார்கங்கை நதிதவழும் சடைமுடியார் ஞானம்.அளித் திடஉரியார் மதிதவழ்மா ளிகைமுன்றில் மருங்குதவழ்ந் தருளிஞர் என்றும் தற்குறிப்பு ஏற்ற அணி அமையப் பாடியிருப்பதை அறியவும். இக்கருத்துக்களை மேற்கொண்டே திரு பிள்ளை அவர் களும் சேக்கிழார் பெருமானர் கைகொட்டுதற்குரிய காரணங்களை 'ஈன சமயத் தொடக்கெல்லாம் ஒழித்தனம் எனக் கைதட்டுதலும்' என்றனர். சேக்கிழார் தம் திருவாக்கில் மலவாதனே திர்த் தலைப் பற்றிப் பாடிய இடங்கள் பல. இளேயான்குடிமாற நாயனர் கீரையினைக் கல்லி எடுத்ததை மொழியும் நிலையில் சேக்கிழார்,