பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#80 சப்பாணிப் பருவம் 'குழிநிரம் பாத புன்செய்க் குறும் பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க' என்றும், திண்ணணுர் தம் வேட்டையாடிச் செய்த செயல்களைக் கூறப் போவதாகக் குறிப்பிட வந்த இடத்து, "இவ்வண்ணம் பெருமுரிைவர் ஏகினர் இனிஇப்பால் மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமார்ை கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனி ஆடிச் செய்வண்ணத் திறம்மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன் என்று பாடியிருத்தலின், அவர் மலச் செருக்கு ஒழித்தவர் என்பது தெரிகிறது அன்ருே? தாள் சூடித் தீவினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி' என்றும் இவர் குறிப் பிட்டதையும் காண்க. இந்தக் கருத்தில்தான் கை தட்டினர் என் பார் என்பதையே, ஆசிரியர் 'மலச் செருக்கெலாம் ஒழித்தனம் தீர்த்தது அவ்வாதை என்று செப்பிக் கை தட்டு தலும்” என்றனர். உண்மை அன்பர்கள், இந்திரபதவியையோ, பிரம்மன் பதவியையோ, திருமால் பதவியையோ சிறிதும் கருதார், வேண்டவும் வேண்டார். இக்கருத்தினே மணி மொழியாா, கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் தினதடி யாரொட லால்நதி கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல் லாதெங்கள் உத்தமனே என்று அருளியதைக் கொண்டும், கச்சியப்ப சிவாச்சாரி யார்,