பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 381 கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலே இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன் மாலயன் பெறுபதத் தையும் பொருளென மதியேன் சால நின்பதத் தன்மையே வேண்டுவன் தமியேன் என்று அறிவித்துக் கொண்டதையும், சம்பந்த சரணுலயர், அண்டர்பொய் வாழ்வையும் அயன் பொய் வாழ்வையும் விண்டுவின் வாழ்வையும் வெஃகி லேனியான் தண்டைகள் அணிந்ததின் சரணத் தன்பையே கொண்டிட வேண்டுவன் என்று கூறினுன் என்று உணர்த்தி இருப்பதையும் ஈண்டு ஒர்க. இந்தக் கருத்துக்களேயே தாம் 'இந்திரன் மலர்க்கணுன் தேந்துழா யவன் வாழ்க்கையும் நண்ணிய எழும் கருத்தும் தவிர்ந்தனம் என்று நாடிக் கை தட்டுதலும்' என்றனர். சேக்கிழார் பல்வேறு இடங்களில் அரிய உபதேசங்களே அருளிச் செய்துள்ளனர். 'எல்லாாக்கும் முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருள் உளதோ' என்று கூறி மக்களுக்கு உபதேசித்துள் ଖt s୪t ft; ஊன் அ டைந்த உடம்பின் பிறவியைத் தான்.அ டைந்த உறுதியைச் சாருமால் தேன்.அ டைந்த மலர்ப்பொழில் தில்லேயுள் மாந டம்செய் வரதர்பொன் தாள்தொழ என்றும், மலர்மிசை அயனும் மாலும் காணுதற் கரிய வள்ளல் பலர்புகழ் வெண்ணெய் நல்லுரர் ஆவணப் பழமை காட்டி உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலேமை ஆகும் என்றும் திருவருள் புரிந்த உபதேசங்களேயும் காண்க.