பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி ፳፰ - m உணர்ந்துகொள்க. இதற்கு இலக்கணமும் துணைபுரிகிறது. 'செப்பரிய காப்புத்தால் செங்கீரை' என்னும் வெண்பாப் பாட்டியலைக் காண்க. சப்பாணிப்பருவம் : இது குழந்தையை இருகைகளேயும் சேர்த்துத் தட்டி ஓசை எழுப்புமாறு வேண்டுதல் ஆகும். இஃது ஒன்பதாம் மாத நிகழ்ச்சி. 'ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும்' என்பது பிங்கலந்தை. 'குலைகெழு தடநிறை கலைசை நகர்க்கிறை கொட்டுக சப்பாணி" -செங்கழுநீர் விநாயகர். பிள் ைத்தமிழ் முத்தப் பருவம் இது குழந்தையை முத்தம் தருமாறு வேண்டும் பருவமாகும். இது பதினேராவது மாத நிகழ்ச்சி, 'பத்திைேடு ஒன்றில் முத்தம் கூறலும்'என்பது பிங்கலந்தை. இந்தப் பருவத்தைப்பாடுவதில் புலவர்கட்டுப் பெருவிருப்பம் ஏற்படும். முத்தம் என்னும் சொல், முத்துக்களையும் வாய் முத்தையும் குறிக்கும். ஆகவே, குழந்தையை முத்தம் கேட்கும்போது, 'பல்வேறு இடங்களில் தோன்றும் முத்தம், வேண்டா. உன் முத்தமே வேண்டும்' என்று கூறும்போது எவவளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதை அப்பாட்டைப் படிக்கும்போதுதான் தெரியவரும். முத்தம்தனக்கு விலைஇல்லை முருகா முத்தம் தருகவே முத்தம் சொரியும் கடல்அலைவாய் முருகா முத்தம் தருகவே -திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் வாரானப் பருவம் : இது குழக்தையை வருக வருக என அழைக்கும் பருவம் ஆகும். இது பன்னிரண்டாம் மாத நிகழ்ச்சி. அதாவது ஓராம் ஆண்டு நிகழ்ச்சி. இதனைப் பிங்கலத்தை நிகண்டு 'ஆண்டு வரையின் ஈண்டு வருக என்றலும்” என்று கூறுகிறது. வா+ரு+ஆனை என்று இச்சொல் பிரியும். ஆனை தொழிற் பெயர் விகுதி. இது வருகைப் பருவம் என்றும் கூறப்பெறும். அதுபோது,