பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 சப்பாணிப் பருவம் தம் மனோதத்துவ சாத்திர ஞானத்தை-உளநூல் அறிவைஅறியலாம். இன்னுேரன்ன காரணங்களினல் இவர் ஞாளுசிரியராயினர். பெரிய புராணத்தில் உபதேச முறையில் பல பாக்களைப் பாடி இருத்தலின் இவர் ஞானுசிரியராகத் திகழ்கின்றனர் என்ருலும் பொருந்தும். சேக்கிழார் பிறந்தருளிய காரணத்தால் குன்றத்துரர் அகிலம் எல்லாம் புகழும் பெருமை பெற்றது என்பதை ஆசிரியர் இறுதியில் குறிப்பிட்டுள்ளனர். (40) 10. நிலவிய நாகே சுரரினி தமர்தலின் நிகழ்நச கேசுரமாய் நீல்மணி மாடம் நிலாவலின் இந்திர நீல பருப்பதமாய்க் கலவிய செம்மணி மாட்த் தால்ஒளி கால்அர தனகிரியாய்க் கருடிப் பச்சை யில் ஆலியா வோரும் காண்மர கதமலையா உலவிய வெண்சுதை தீற்றும் இலால்ஓங் கொருகை லேக்கிரியாய் உத்தமம் ஆச்பல ஏதுவி னுல்இனும் உரைதரு பற்பலவாய்க் குலவிய வளமார் குன்றத்தூரன் கொட்டுக சப்பாணி கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி (அ. செ.) நிலவிய-விளங்கிய, பொருந்திய, நாகே சரம்-திருநாகேஸ்வரம் என்னும் ஆலயம், நீல்மணி-நீல மணி, மாடம்-மாளிகை, திருப்பதி, இந்திர நீலப்பருப்பதம்இந்திர நீலப் பருப்பதம் என்னும் தலம், கால-வீச, அரதன