பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முத்தப் பருவம் 1. திருப்பஞ் சாதி மறையுணர்மண் தேவ ராதி நால்வர்களுஞ் செறிந்த மற்றை மூவர்களுந் தீரா இருவல் வினைத்தொட்ர்பால் உருப்பஞ் சாரும் பிறந்தைமரீஇ புறமேற் போயுங் கீழிழிந்தும் உழற லாய பெருந்தாகம் ஒருங்கு மாய்த்தின் பொருங்கடைய விருப்பஞ் சாரு மெய்யடியார் மிக்க தொகையா ரொன்பதின்மர் மேய தனியா ரறுபதின்மர் மேலு மூவர் சரித்திரமாங் கருப்பஞ் சாறு மொழிமதுரக் கனிவாய் முத்தத் தருகவே கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (அ. சொ.) பஞ்சாதி-வேதங்களில் ஐந்து, ஐம்பது எண்ணிக்கையில் அமைந்த ஸ்லோகம். இதனை வடமொழி யாளர் பஞ்சாத் என்பர். தனித்தனியே பெரும்பாலும் ஐம்பது மொழிகள் கொண்ட யசுர்வேதம் என்பர். இவ்வாறு முறைப்படுத்தி அமைத்தவன் இராவணன் என்றும் கூறப் படுகிறது. மண்தேவர்-பூசுரர் எனப்படும் பிராமணர், ஆதி-முதலிய, நால்வர்-வேதியர், அரசர், வணிகர், வேளாளர், செறிந்த-சேர்ந்த, கலப்பினுல் உண்டான மற்றை மூவர்-அநூலோபர், பிரதிலோமர், சங்கரர், இரு வல்வினே-இரண்டு கொடிய வினைகளாகிய, நல்வனை தீவினை கள், உருப்பம்-வெப்பம், பிறந்தை-பிறப்பு, மரீஇ-பொருந்தி,