பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முத்தப் பருவம் உழறல்-உயர்ந்த யோனிகளிலும் தாழ்ந்த யோனிகளிலும் மாறிப்பிறத்தல், தாகம்-காமவேட்கை, ஒருங்கு-ஒருசேர, இன்பு-பேரின்பம், இன்பம்-வீடு-கனக்குன்றயன்-பொன்மய மான குன்றுகள் நிறைந்த குன்றத்துTரர், அனக-குற்றம் அற்றவனே. விளக்கம்: முத்தப் பருவம் என்பது குழந்தை பிறந்த பதினேராம் மாதத்தில் தாதியர் குழந்தையை நோக்கித் தமக்கு முத்தம் தருமாறு வேண்டும் பருவமாகும். 'பத்தினே டொன்றில் முத்தம் கூறலும்' என்பது பிங்கலந்தை. பிராமணர்கட்குப் பஞ்சாதி ஒதுதல் கடமையாதல் போல ஏனையோர்க்குப் பஞ்சபுராணம் ஒதல் கடமை ஆதலின் பஞ் சாதி எனப் பொதுப்படக் கூறினர். தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப் பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய இவற்றின் பாடல்களைப் பூசை முடிவில் ஒதுதலே பஞ்ச புராணம் கூறல் ஆகும். அதுலோபர், பிரதிலோபர், சங்கரர் எனப்படும் மூவர் கள். இவர்கள் உயர்ந்த சாதி கலப்பாலும் தாழ்ந்த சாதி கலப்பாலும் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி கலப்பாலும் இவ்வாறு பலவகை கலப்பாலும் பிறந்த மரபினர் ஆவார். சுரர் என்னும் சொல் தேவர்கள் என்று பொருள்படும். அவர்களே தேசுரர் என்றபோது தேவலோக தேவர் என்றும், பூசுரர் என்றபோது மண்ணுலக தேவர் என்றும் குறிக்கப்பெறுவர். ஆகவே, அவர்கள் ஈண்டு மண்தேவர் எனப்பட்டனர். இக்கால நாகரிக வாழ்வில் ஈடுபடாமல், அக்கால வேத ஒழுக்கத்தில் ஈடுபட்டு, ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகை தொழிலினை மேற்கொண்டு விளங்கினமையின் அவர்கள் மண்தேவர் என்னும் சிறப்புக்கு உரியவராயினர். 'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்பது தொல்காப் பியம்: பூசார் ஆயினும் ஒழுக்கத்தில் இவர்கள் பெரிதும் விழிப்புடையராய் இருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர், 'மறப்பினும் ஒத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்