பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 4.17 பொய்யடிமை இல்லாத புலவரைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களைக் கொண்டு நன்கு தெள்ளத் தெளிய உணரலாம். அப்பாடல்களில் மதுரைச் சங்கத்தைப் பற்றியோ, நக்கீரர், கபிலர், பரணர்களைப் பற்றியோ எந்தவிதமான குறிப்பும் காணப்படாமையினைக் காணவும். மேலும், தனி அடியார்கள் அறுபான்மும்மை அடியார்களா என்பதையும் நாம் ஆராய்தல்வேண்டும். இவ்வாராய்ச்சிக்குப் பெருந்துணை செய்வது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையே ஆகும். திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் ஒவ்வோர் அடியார்களேயும் சுட்டிச் சுட்டி, அன்ஞர்க்கும் அன்னர் அடியார்கட்கும் தாம் அடிமை அடிமை என்ற முறையில் அடியேன் அடியேன் என்று பாடிச் சென்றுள்ளார். அங்ங்ணம் பாடிய அவர், தம் பெற்ருோகளாகிய சடையனுர் இசைஞானியர்களின் பெயர்களைச் சுட்டியபோது, அவர் கட்கும் அடியேன் என்று கூறிற்றிலர். ஆணுல், அன்ஞர் இருவர்கட்குத் தாம் திருமகளுர் என்பதைத்தான் கூறி யுள்ளனர். அதனுல் சுந்தரர் தம் இரு முது குரவர்களைப் பெற்றேர்கள் என்று கருதியுள்ளாரே அல்லாமல், அடி யார்கள் என்று கருதினர் இல்லை என்பது புலளுகின்ற தன்ருே? ஆகவே, தனியடியார் அறுபான் மூவர் என்று தொகை கொடுத்து முடிவு கட்டுதல் ஆராய்ச்சி உலகிற்கு அரண் செய்யாது. ஆனால், சமய உலகிற்கு அரண் செய்யும் என்ப்தை ஈண்டு நினைவுபடுத்துகின்றேன். பொய்யடிமை இல்லாத புலவரைப்பற்றி மேலும் தெள்ளத் தெளிய அறிய அவாவுவார், அடியேன் எழுதி யுள்ள பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்னும் ஆய்வு நூலில் காண்பாராக. குன்றத்துார் வெண்சுதை திட்டப்பெற்ற வெள்ளிய கட்டடங்களின் மாடமாளிகைகள் கூடகோபுரங்களை உடை யது. ஆகவே, அது கைலேக்கிரி ஆயிற்று. இவற்றின் மீது சூரியனது ஒளிக்கதிர்கள் படும்போது, அவை பொன் னிறமாக ஒளிவிடும். இதனே யாப்பருங் கலக் காரிகைப் பாடல் கொண்டும் நிறுவலாம். 27