பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள் 8i த் தமிழ் துல் ஆராய்ச்சி fh. (fi. 历 # } *り நீராடல் பருவம் : இதபெண் குழந்தையை நீரில் குளிக்கு மாறு வேண்டும் பருவம் இங்கு ஒரு குறிப்பை அறிதல் நன்று. நீராடற்குப் பதிலாகக் கழங்காடுமாறு வேண்டுதலை ஒரு பருவமாகக் குறிப்பதும் உண்டு. இவ்வாறு கழங்காடற் பருவம் அமையப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் சிவயோக நாயகி பிள்னைத் தமிழ் ஆகும். மெய்வளர் பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீர் ஆடியருளே மெய்த்தவத் துறைமேவும் உத்தமக் கெளமாரி வெள்ளநீர் ஆடியருளே -பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் ஊசல் பருவம் : இது பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆடுமாறு வேண்டும் பருவம் ஆகும். புரிசச்சி தானந்த சகளநிட் களவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புகழ்மூங்கில் வன நன்மை திகழ்காந்தி மதிஅம்மை பொன்ஊசல் ஆடிஅருளே -திருதெல்வேலிக் காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ் இங்குக் கூறப்பட்ட பருவங்களில் காப்பும் பருவத்திற்குப் பதினோரு பாடல்களும், பன்னிரண்டு பாடல்களும் ஏனைய பருவங்சட்குப் பப்பத்தும் பாடும் மரபு பெரிதும் தழுவப் பட்டுவந்துள்ளதை மேலே கூறி இருப்பதை நினைவில் கொள்க. ஆனல், இம்மரபு சிறிது மாறுபட்டு வருதலையும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைப் பார்க்கும்போது அறிய வருகிறது. இதனைக் கீழ்க் குறிக்கப்பெறும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வழி நன்கு உணரலாம். கலேசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஐந்தைந்து பாடல்களே உள்ளன. சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏழு ஏழு பாடல்களே G£.—IV