பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நிலஞ்சார் தெய்வக் கற்பகமே நிமல ஞான வாரிதியே நீடுஞ் சைவப் பெருவாழ்வே நிலவா நின்ற குணக்குன்றே வலஞ்சார் பெருநா வலரேறே மாரு அருட்சிந் தாமணியே மதிப்பார் மதியுன் எழுஞ்சுடரே வாழ்த்து வார்தம் பெரும்பேறே புலஞ்சார் பத்தி விளைநிலமே போக்கு வரவில் பூரணமே புந்திக் கினிக்குஞ் சுவையமுதே போற்றி இனிமேல் ஒரு தாயர் கலஞ்சார் முலைப்பால் அருந்தாத கனிவாய் முத்தந் தருகவே கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (அ. சொ.) சார்-அடைந்த, நிமல-குற்றம் அற்ற, ஞானவாரிதியே-அறிவுக் கடலே, நிலவா - விளங்கி, வலம்வெற்றி, ஏறே-தலைவரே, மாரு-தவருமல், மதிப்பார்போற்றுபவர், மதியுள்-அறிவில், பூரணமே-நிறைவே, போக்கு-இறப்பு, வரவு-பிறப்பு, புந்திக்கு-அறிவுக்கு, கலம் சார்-செப்புக் குடம் போன்ற, விளக்கம்: ஆசிரியர் ஈண்டுச் சேக்கிழார் பெருமாளுரை கற்பகமே, வாரிதியே. பெருவாழ்வே, குணக்குன்றே, ாவலர் ஏறே, சிந்தாமனிைச் சுடரே, பெரும்பேறே, பத்திவிளைநிலமே, பூரணமே, அமுதே' என்று வாயாரப் போற்றிப் புகழ்கின்ருர், கற்பகம் என்பது தேவலோகப் பஞ்ச விருட்சங்களுள் ஒன்று. பஞ்ச விருட்சங்கள் அரிச்சந்தானம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. தன்னேச்