பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முத்தப் பருவம் கடலில் சென்று ஆறுகள் பாய்வதனலும், மலைகளின் உச்சியினின்று அருவிகள் பாய்வதனலும் மலர்களில் தேன் இருத்தலாலும் ஈண்டு ஆசிரியர் 'மேகம் எல்லாம் அலே உததி பாய' என்றும், 'அருவி வரைகள் பாய' என்றும், 'மலர் மதுப் பாய' என்றும் ஈண்டு கூறினர். சம்பராரி என்பவன் மன்மதன். அவன் சம்பரன் என்போனேக் கொன்றவன். இதனை இரதி, செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலேபிடித்த தடக்கை வீரா வம்பவளக் குன்றனய சிவன்விழியால் வெந்துடலம் அழிவுற் ருயே உம்பர்கள்தம் விழி எல்லாம் உறங்கிற்ருே அயனரும் உவப்புற் ருரோ என்று புலம்பிய புலம்பலில் குறிப்பிட்டிருப்பது காண்க. மன்மதன் மோகம் ஊட்டுதற்கு ஐந்து மலர் அம்புக் களைக் கொண்டவன். அவை தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளே. இதனுல்தான் ஈண்டு, சரமெலாம்” என்றனர். மன்மதன் காதலர்கள் இடையே நின்று அவன் கனேகளைக் செலுத்துவது கடனுகக் கொண்டவன் என்பதைச் சேக்கிழார் பெருமாளுர், 'நாவலர் காவலர் நின்ருர் நடுநின்ருர் படை மதனுர்’ நடுநின்ருர் என்பதனால், இருவர்மீது அம்பு பாய இடை நின்ருன் மன்மதன் என்பது பெற்ரும். நீர்வளத்தின் மிகுதியினைப் புலவர்கள் வாளேயின்துள்ள லைக்கூறி வர்ணித்தல் மரபு. குமரகுருபரரும் வாளே ஆகாயம் அளவு பாய்ந்து சந்திரனில் மோதி அமுத வெள்ளம் பொழியச் செய்தது என்பதை, 'மதிமுயல் கலேகிழித்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும்தகட்டு அகட்டு இளவாளை மோத’ என்றனர். இக்கருத்தைப்