பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 467 என்று பாடி இருப்பதையும் அறிதல் வேண்டும். குமர குருபரர் தாம் பாடிய மீளுட்சி அம்மை பிள்ளைத்தமிழில் வாளேயின் அட்டகாசத்தை, ஒடும் படலே முகில்படலம் உவர்நீத் துவரி மேய்ந்துகரு ஊறும் கமஞ்சூல் வயிறுடைய உகைத்துக் கடவுள் கற்பகப்பூங் காடும் தரங்கக் கங்கைநெடும் கழியும் நீந்தி அமுதிறைக்கும் கலைவெண் மதியின் முயல் தடவிக் கதிர்மீன் கற்றை திரைத்துதறி மூடும் ககன வெளிக்கூட முகடு திறந்து புறங்கோத்த முந்நீர் உழக்கிச் சின வாளே மூரிச் சுறவி ளுேடுவிளே யாடும்;பழனத் தமிழ்மதுரைக் கரசே தர்லோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ என்று பாடியிருப்பதையும் படித்து இன்புறலாம். சந்திரனில் அமுதுண்டு என்பது, பொன்மய மான சடைமதிக் கலையின் புத்தமுது குத்தனர் அதுபோய்ச் சின்மய மானதம்மடி அடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போல் தன்மய மாக்கி அந்நகர் முழுதும் சாந்திசெய் ததுவது மதுர நன்மய மானதன் மையால் மதுரா நகர் என உரைத்தனர் நாமம் என்ற திருவிளையாடற் புராணப் பாடலால் தெரிய வருகிறது. மதியில் அமுதிருத்தலே மேலே காட்டப் பட்ட குமரகுருபரர் பாடல்கொண்டும் அறியவும்.